Skip to main content

முறைகேடான கூடா உறவுகள்! -போக்சோ கைதுகள்!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

 

முறை தவறிய உறவுகளை சித்தரிக்கும் வீடியோக்களும் கதைகளும் படங்களும் இணையத்தில் மலிந்து கிடக்கின்றன. நம் சமூகத்தில் பலருக்கும் அவற்றை பார்க்கும், படிக்கும் பழக்கம் இருக்கிறது. அந்த வீடியோக்களைப் பார்த்த அத்தனை பேருமே, அதுபோன்ற தவறுகளைச் செய்துவருகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. தற்போது காவல்துறையின் நடவடிக்கைகளால் பெரும்பாலான ஆபாச தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் சமூக விரோதிகள் புதுப்புது பெயர்களில் தளங்களை உருவாக்கி வருகின்றனர்.


இந்த ஆபாச வலைத்தளங்களெல்லாம் பின்னாளில் வந்தவை. முன்போ, புத்தக வடிவில் கடைகளில் மறைத்து வைத்து விற்று வந்தார்கள். எதற்காக இந்த ஆபாசக் குப்பைகளை இந்தக் கட்டுரையில் கிளற வேண்டியதிருக்கிறது என்றால், நிஜத்திலும் இதுபோன்ற கொடுமைகள் நடந்து வருவதால்தான். இந்த வாரத்தில் நடந்த இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்!

தஞ்சை மாவட்டம் – வல்லம்  போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வில்லிங்ஸ்டன் கிறிஸ்டோபர், தன் மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த, மகள் முறையுள்ள 9 வயது சிறுமியை, பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

 

incident in viruthunagar


விருதுநகரில் நடந்ததோ, கொடுமையிலும் கொடுமை! மகேந்திரன் – தமிழ்செல்வி தம்பதியருக்கு குழந்தைகள் கிடையாது. அதனால், தமிழ்செல்வியின் அக்கா மகளான சுதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தத்தெடுத்து மகளாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், வளர்ப்பு தந்தையான மகேந்திரன், சிறுமி சுதாவிடம், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்திருக்கிறார்.  

 

incident in viruthunagar


ஒன்றரை வருடங்களுக்கு முன், மகேந்திரன் நோய்வாய்ப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது சிறுமி சுதாவை, அவளது பெரியப்பாவான ராமபாண்டியின் வீட்டுக்கு கொண்டுபோய் விட்டனர். அங்கும் அண்ணன் முறையுள்ள காமராஜ் பெருமாள் என்ற மிருகம், தொடர்ந்து சுதாவை சீரழித்து வந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், திரும்பவும் வளர்ப்பு தந்தை மகேந்திரனின் வீட்டுக்கு சுதா அழைத்து வரப்பட்டாள். அங்கு, அவள் பருவமடைந்து 15 நாட்களே ஆன நிலையில், அண்ணன் காமராஜ் பெருமாள், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், இதை வெளியில்சொன்னால், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.

இந்தச் சிறுவயதில், வளர்ப்பு தந்தையாலும், அண்ணன் முறையுள்ளவராலும், தொடர்ந்து பாதிப்புக்கு ஆளான சுதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, அவள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை, மருத்துவர் அறிந்திருக்கிறார். மருத்துவமனை நிர்வாகம், காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கிறது. பிறகு, தமிழ்செல்வி, தன் கணவர் மகேந்திரன் மீதும், மகன் முறையுள்ள காமராஜ் பெருமாள் மீதும், விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, போக்சோ சட்டத்தில் இருவரும் கைது கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

incident in viruthunagar


இத்தனைக்கும் காமராஜ் பெருமாளுக்கு மனைவி, குழந்தை என குடும்பம் இருக்கிறது. ஆனாலும், போக்கிரித்தனம் உள்ளவர்கள் என்பதாலோ என்னவோ, காமராஜ் பெருமாளின் நட்பு வட்டத்துக்கு ‘நரிக்கூட்டம்’ எனப் பெயர் வைத்துள்ளனர். காமராஜ் பெருமாள் மீதான கைது நடவடிக்கை, நரிக்கூட்டத்துக்கு கிலி ஏற்படுத்தியிருக்கிறது. “அவன் ஒருவன்தான் அப்படி; நாங்கள்லாம் நல்லவங்க..” என்று தன்னிலை விளக்கம் அளித்து வருகின்றனராம்.

 

incident in viruthunagar

 

Ad

 

நம் தமிழ்க்கலாச்சாரத்தில் - தாத்தா, பாட்டி,  அம்மா, அப்பா,  அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி,  அண்ணி, மச்சினி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், அத்தை, அத்தை பையன், மாமா பொண்ணு என உறவுமுறைகள் எத்தனையோ உண்டு. இவற்றை, உரிமை கலந்த பாசத்தோடு பேணிக் காப்பவர்கள் அனேகம் பேர்.

குடும்பமே கோவில்! உறவுமுறைகள் உன்னதமானவை!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.