incident in viruthachalam

விருத்தாசலத்தை அடுத்த பாசிக்குளம் கிராமத்தில், 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இரு சிறுவர்கள்உட்பட 3 பேரை விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த பாசிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன்ராஜ்(18) மற்றும் இரு சிறுவர்கள் அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கிருபாலட்சுமி, பிரவீன்ராஜ் மற்றும்இரு சிறுவர்களிடமும் விசாரணை நடத்தி, பிரவீன் ராஜ் மீது 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்தார். மேலும், இரு சிறுவர்களும் சிறுவர் சீர்சிருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment