Skip to main content

பெண் தொடர்பால் பழிக்குப்பழி! சிசிடிவியில் பதிவான 4-வது கொலை! -விருதுநகரில் கொலை வெறித்தாண்டவம்!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

எங்கேஎன்ன செய்தாலும், அட, கொலையே நடந்தாலும், அந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி,ஏதோ ஒரு கோணத்தில் காட்சியைப் பதிவு செய்துவிடுகிறது. ஆனாலும், சர்வ சாதாரணமாகக் கொலைகள்நடக்கின்றன. சிசிடிவிக்களும் சளைக்காமல் பதிவு செய்துவிடுகின்றன. விருதுநகர், அல்லம்பட்டியில்,  12-ஆம் தேதி இரவு,  அப்படி நடந்த ஒரு கொலைதான் சிசிடிவி காட்சியாக வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘எல்லாம்முன்விரோதம்தான்’ என்கிறது விருதுநகர் காவல்துறை.

 

அப்படி என்ன பகையாம்?  


மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பகை வளர்ந்திருக்கிறது. விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் கட்டிடத்தொழிலாளியான சங்கர் என்ற சங்கரேஸ்வரன். இவரது பெரியப்பா மகளைக் கேலி செய்தார் முத்துக்காமாட்சி.மேலும் சங்கரின் உறவுக்காரப் பெண் ஒருவருடனும் தகாத தொடர்பு வைத்திருந்தார். அதனால்,சங்கரின் உறவினரான சுகன்ராஜ் முத்துக்காமாட்சியைக் கண்டித்தார். அந்த ஆத்திரத்தில்,2018, பிப்ரவரியில் முத்துக்காமாட்சி உள்ளிட்ட சிலர் சுகன்ராஜை ஆயுதங்களால் தாக்கி ஊனமாக்கினார்கள். கைதாகி,  மூன்றே மாதங்களில்(2018 மே) சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்த முத்துக்காமாட்சியை ஆட்டோவில் வந்த கும்பல்வெட்டி கொலை செய்தது. பத்து பேர் மீது விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குபதிவாகி, சண்முகம், சங்கர், செல்வம், வேல்சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பிணையில் வெளிவந்த சங்கரை முத்துகாமாட்சி தரப்பினர் வெட்டிக் கொலை செய்தனர். இந்தக் கொலை வழக்கில் முத்துராமன்பட்டியைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். பிணையில் வெளிவந்த அந்த அருண்பாண்டியனும்,  மூன்று மாதங்களுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.


 

incident in virudhunagar.... cctv footage



2018 பிப்ரவரியில் சுகன்ராஜ் வெட்டப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று கொலைகள் நடந்துள்ளன.அதன் தொடர்ச்சியாகத்தான், நேற்றிரவு 4-வது நபராக (12-ஆம் தேதி) சண்முகம் என்ற சண்முகவேல்ராஜன் கொலை செய்யப்பட்டு, அந்தக் கொலைவெறித் தாண்டவம் சிசிடிவியில் பதிவாகி, ஒட்டுமொத்த விருதுநகரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


 

incident in virudhunagar.... cctv footage

 

யார் இந்த சண்முகவேல்ராஜன்?

ரியல்எஸ்டேட் தொழில் செய்துவரும் சண்முகவேல்ராஜனுக்கு மூன்று மாதங்களுக்கு முன் அதிமுகவில் மாணவரணி அவைத்தலைவர் பொறுப்பு தந்தனர். இவருடைய மனைவி வசந்தி, விருதுநகர் அருகிலுள்ள காமராஜர் பொறியியல் கல்லூரியில் அலுவலகஎழுத்தராகப் பணியாற்றுகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு தன் வீட்டிலிருந்த சண்முகவேல் ராஜனை  டூ வீலர்களில்வந்த 8 பேர் கொண்ட கும்பல் வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுதப்பி ஓடியது. சம்பவ இடத்திலிருந்து சண்முகவேல்ராஜனின் உடலை மீட்ட விருதுநகர் கிழக்குகாவல்நிலைய போலீசார் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக்கொலையில் நடந்த குளறுபடி என்னவென்றால், சண்முகவேல்ராஜனை அந்தக் கும்பல் மாறி மாறி வெட்டியபோது, அனுபவமின்மை காரணமாக, தவறுதலாக ஒருவரின் கையையும்,  இன்னொருவரின்  தலையையும் அரிவாள் பதம் பார்த்துவிட்டது.  வலி பொறுக்க முடியாத அவர்கள், ரத்தக் காயங்களுடன் 108 ஆம்புலன்ஸை அழைத்திருக்கின்றனர். அதனால்தான், சதீஷையும் சேர்மராஜையும் காவல்துறையால் கைது செய்ய முடிந்திருக்கிறது.மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.

“சுகன்ராஜ் வெட்டுப்பட்டபோதே விருதுநகர் காவல்துறை உஷார் ஆகியிருக்க வேண்டும். அதற்கு பழிதீர்க்கும்விதமாக முத்துக்காமாட்சி கொலை செய்யப்பட்டபோதாவது எச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும். பெண் தொடர்பில் ஆரம்பித்து, இத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன. வழக்கு பதிவுசெய்வது மட்டும்தான் காவல்துறையின் பணியா? தனிப்பிரிவு போலீசார் பழிக்குப்பழி வன்மத்தைஏன் ‘ஸ்மெல்’ செய்யவில்லை? அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான செயலிலும் இறங்கவில்லை? சண்முகத்தை அந்தக் கும்பல் வெட்டியபோது அந்த மூதாட்டி (அம்மா) புகுந்து தடுக்க முயற்சிக்கிறார்.அவர் பக்கமும் அரிவாளைத் திருப்பி கீழே தள்ளிவிடுகிறார் முகத்தில் கர்ச்சீப் மாட்டியகொலையாளி ஒருவர். இதெல்லாம் கொடுமை அல்லவா?” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள்.

 

PP


தனக்கு விரோதமானவர்கள் எந்த நேரத்திலும் தன்னைத் தாக்குவார்கள் என்பதை அறிந்தேதான்,  தன் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தியிருக்கிறார் சண்முகவேல்ராஜன். அந்த கேமராவில் பதிவான ‘கொலைக்காட்சி’வெளியே  ‘லீக்’ ஆனது, விருதுநகர் மாவட்டத்தில்புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் எஸ்.பி. பெருமாளைரொம்பவே  ‘டென்ஷன்’ ஆக்கியிருக்கிறது.

ஒரு உயிரைப் பறிப்பது எத்தனை கொடுமையானது! சட்டத்தின் மூலமாக தண்டனை கிடைக்குமென்றாலும், சர்வ சாதாரணமாக கொலைகள் நடக்கின்றனவே!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.