Skip to main content

கழிவுநீர் கால்வாயில் இளம்பெண் சடலம்... வன்கொடுமை செய்து கொலையா?

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக பொதுமக்கள் சிலர் ஜனவரி 2ந்தேதி நடந்து சென்றனர். அப்போது கால்வாயில் கவிழ்ந்த நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். வடக்கு காவல்நிலைய அதிகாரிகள் சம்பவயிடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

incident


இதுகுறித்து போலீசார் கூறுகையில், இறந்த பெண் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம். வேலூருக்கு வந்து காணாமல் போன வடமாநில பெண்களின் பட்டியலை வைத்து அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளோம். இறந்த பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் இறந்து 2 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணின் சடலம் அரை நிர்வாணத்துடன் மீட்கப்பட்டுள்ளதால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.

இறந்த பெண் சிவப்பு கலர் சுடிதார் அணிந்திருந்தார், பாப் கட்டிங் வெட்டியிருந்தார் என்பதை குறித்துக்கொண்டனர். இறந்தவரின் புகைப்படத்தை நோட்டீஸ்சாக போட்டு வேலூரில் மருத்துவ சிகிச்சைக்காக வந்து தங்கியுள்ள வடமாநிலத்தவரிடம் விசாரிக்கவும் போலீஸ் முடிவு செய்துள்ளது.

தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக தென்னிந்தியாவின் பிரபல மருத்துவமனைகளில் ஒன்றான சி.எம்.சி மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆயிரக்கணக்கான வடமாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்கள், மேற்கு வங்கத்தினர் இங்கே தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் சிலரை பண ஆசைக்காட்டி ஏமாற்றி தவறான வழிகளில் ஈடுப்படுத்தவே ஒரு கும்பல் உள்ளது. அந்த கும்பல் செய்த செயலா? அல்லது வேறு ஏதெனும் காரணமா என தெரியவில்லை.

அந்த பெண்ணை பற்றி தகவல்கள் தெரியவந்த பின்பே இறப்பிற்கான முழு விபரம் தெரியவரும் என்பதால் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.