Skip to main content

தேசிய நெடுஞ்சாலையில் இறந்த உடலை கிடத்தி சாலை மறியல்

Published on 21/05/2020 | Edited on 21/05/2020
incident in vellore pallikonda

 

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகேயுள்ள ஐயாவூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகன் 30 வயதான பிரதாப், ஊர்க்காவல் படையில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் மே 20ந்தேதி அகரம்சேரி அருகே சென்னை – பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் அருகில் இறந்து கிடந்தார். அவரின் உடலில் காயங்கள் இருந்தன. இவரது குடும்பத்தார் வந்து உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர்.


மே22ந் தேதி மாலை 4 மணியளவில் அடக்கம் செய்ய இறுதி பயணத்துக்காக வாகனத்தில் சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். அப்போது, இறந்தவரின் குடும்பதார், உறவினர்கள் மற்றம் நண்பர்கள் பிரதாப்பின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவரை அடித்து கொலை செய்து யாரோ வீசியுள்ளனர், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை – பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிக்கொண்டா சுங்கசாவடி அருகே சாலை மறியல் செய்தனர்.

சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் நடுரோட்டில் உடலை கிடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் சாலை மறியல் நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய பணிக்கும், அவசர பணிக்கும் வாகனத்தில் செல்பவர்களின் வாகனத்தில் சிக்கி நின்றன. இதனால் பதட்டம் அதிகமானது. பள்ளிக்கொண்டா போலீஸார் சாலைமறியல் நடைபெற்ற இடத்துக்கு வந்து, புகார் பதிவு செய்துள்ளோம், மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளோம், விசாரணை நடைபெற்று வருகிறது. நிச்சயம் நீதி கிடைக்கும் என நீண்ட நேரம் சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட செய்து, உடல் அடக்கம் செய்ய வைத்தனர். இது அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.