Skip to main content

டி.ஐ.ஐீ அலுவலக வளாகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தல்... அதிகாரிகள் உடந்தையா?

Published on 25/10/2020 | Edited on 25/10/2020
incident in vellore

 

வேலூர் சாராக காவல்துறை தலைவரான டி.ஐ.ஜீ அலுவலகம் அண்ணாசாலையில் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே மாவட்ட ஆட்சியர் வீடு, அரசு சுற்றுலா மாளிகை, நீதிபதிகள் குடியிருப்பு போன்றவை உள்ளன. அதோடு சில முக்கிய அரசு அலுவலகங்களும் இந்த சாலையில் உள்ளன. நகரத்தின் மையத்தில் உள்ள இந்த பகுதி வழியாக திருவண்ணாமலை உட்பட தென்மாவட்டங்களுக்கான வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது.

டி.ஐ.ஐீ அலுவலக வளாகம் பரந்து விரிந்தது. இந்த அலுவலக வளாகத்தின் உள்ளே சந்தனமரங்கள், தேக்குமரங்கள் என பல மரங்கள் உள்ளன. இதில் ஒரு சந்தன மரத்தை கடந்த அக்டோபர் 23ந்தேதி இரவு வெட்டி கடத்தியதாக கூறப்படுகிறது. 24 ஆம் தேதி காலை பணிக்கு வந்த காவலர்கள் இதனைப்பார்த்துவிட்டு டி.ஐ.ஐீ காமனிக்கு தகவல் தந்துள்ளனர். அதன்பின் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்திவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக வேலூர் மாவட்ட வனத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. 24 மணி நேரமும் பாதுகாப்பு உள்ள காவல்துறை சாரக அதிகாரியின் அலுவலக வளாகத்திலேயே இருந்த மரம் திருடு போயிருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மாவட்டத்தின் மிக முக்கிய அரசு அதிகாரியின் அலுவலத்தில், வீட்டில் திருடு போவது புதியதல்ல. இதே வேலூரில் கடந்த 2015ல் அப்போது மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த நந்தகோபால் இருந்தார். வேலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கான அரசு பங்களாவில் வளர்ந்திருந்த பெரிய சந்தனமரத்தை, வெட்டி எடுத்து சென்றது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி தந்தது. கலெக்டர் பங்களாவுக்கு அருகில் அரசு சுற்றுலா மாளிகை உள்ளது. அந்த மாளிகை வளாகத்தில் இருந்த சந்தன மரத்தை 2016ல் வெட்டி எடுத்து சென்றிருந்தனர் மரக்கொள்ளையர்கள். இந்த இரண்டு வழக்கிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் அதே பகுதியில் நாட்டை, பொதுமக்களை பாதுகாக்கும் காவல்துறையின் உயர் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்த சந்தன மரத்தையே பாதுகாக்க முடியாமல் திருடு கொடுத்துள்ளது காவல்துறை.

இதுப்பற்றி நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், சந்தனமரம் என்ன சோப்பு டப்பாவா பாக்கெட்ல எடுத்து வச்சிக்கிட்டு போறாதுக்கு. பெரியதாக வளர்ந்த மரம். அதனை மிஷின் வழியாக அறுத்து கீழே தள்ளி, அதன்பின் அதன் கிளைகளை கட் செய்துவிட்டு, பின்னர் மரத்தினை துண்டு துண்டாக்கி அதனை வாகனத்தில் ஏற்றி எடுத்து செல்ல குறைந்த பட்சம் 2 முதல் 3 மணி நேரமாகியிருக்கும். டிஐஐீ அலுவலகம் என்பது பாதுகாப்பு நிறைந்தது. அப்படியிருக்க அந்த அலுவலகத்தில் இருந்த மரத்தையே காப்பாற்ற முடியவில்லை என்பது நம்பும் படியாக இல்லை. அதிகாரிகள் துணையில்லாமல் இதனை செய்தியிருக்க சாத்தியமேயில்லை என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 Income Tax officials conducted a surprise raid at the office of a DMK official

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நா.அசோகன். வேலூர் மாநகர மாவட்ட திமுக பொருளாளராகவும், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ளார். இவர் அரசு ஒப்பந்ததாரராகவும், தோட்டப்பாளையம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் வைத்தும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மார்ச் 19 ஆம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் வேலூரை சேர்ந்த கூடுதல் கமிஷனர் பூரணசந்திரன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகி அசோகனுக்கு சொந்தமான தோட்டப்பாளையம் டி.பி.கிருஷ்ணசாமி நகர் பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது அலுவலக ஊழியர்கள் மற்றும் அசோகனின் மகன் அரவிந்தன் இருந்துள்ளனர். பணம் ஏதேனும் இருக்கிறதா என சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பணம் எதுவும் இல்லாத நிலையில் வங்கி தொடர்பான ஆவணங்களை கணினி மூலம் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த சோதனையின் போது அலுவலகத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது.  

சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு இரவு சுமார் 9:43 மணிக்கு சோதனை முடிந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். இதில் பிரிண்டிங் பிரஸ்சின் வங்கி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சம்மன் வழங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக நிர்வாகி அசோகனின் மகன் அரவிந்தன் கூறுகையில், 'முதலில் பணம் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனையிட்டார்கள் பணம் எதுவும் கிடைக்காத நிலையில் வங்கி ஆவணங்களை மட்டும் சரிபார்த்து சென்றார்கள்' என கூறினார்.

Next Story

திடீரென சரிந்து விழுந்த தேர்; மயானக்கொள்ளை விழாவில் நடந்த சோகம்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
The chariot that came grand and collapsed miserably; Tragedy at the funeral ceremony

வடமாவட்டங்களில் பிரபலமான மயானக் கொள்ளை திருவிழா வேலூரின் மிக முக்கியமான பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றாகவும் உள்ளது. பாலாற்றங்கரையில் மயானக்கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மார்ச் 9ஆம் தேதி  மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இத்திருவிழாவையொட்டி வேலூர், விருதம்பட்டு, சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, கழிஞ்சூர் மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து பிரமாண்ட தேர் மூலம் ஊர்வலமாக பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு எடுத்து வந்தனர்.

ஊர்வலத்தின் பின்னேயும் முன்னேயும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகர், அங்காளபரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் போல வேடமிட்டு சென்றனர். சிலர் கையில் சூலாயுதம் ஏந்தி ஆக்ரோஷமாக சென்றதும் பார்ப்பதற்கு தத்ரூபமாக அமைந்து மெய் சிலிர்க்கச் செய்தது.

ஊர்வலத்தில்  இளைஞர்கள் இளம் பெண்கள், சிறுவர்கள்  டி.ஜே.பாடல்களை ஒலிக்கவிட்டு குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். சில ஆண்கள் பலர் பெண்கள் போல வேடமிட்டு, சிலர் எலும்பு துண்டுகளை வாயில் கவ்விய படியும், ஆட்டுக் குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் சென்றது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

The chariot that came grand and collapsed miserably; Tragedy at the funeral ceremony

இதில் விருதம்பட்டு, கழிஞ்சூர், மோட்டூர், வெண்மணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட 3 தேர்களில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்டு வேலூர் பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாக வந்து சூறையாடல் நடைபெற்றது. சூறையாடல் முடிந்து 3 தேர்களும் திரும்பும் சமயம் மோட்டூர், வெண்மணி பகுதியை சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் எதிர்பாராதவிதமாக சரிந்து கீழே விழுந்தது. தேர் சரிவதை பார்த்து அங்கிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி ஓடி தப்பினர். ஆனாலும் வெண்மணி பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் (30) என்பவர் சிக்கிக்கொண்டார். அவரின் அலறலை கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். லேசான காயங்களுடன் அவர் சிகிச்சைபெற்று வருகிறார்.

பாலாற்றில் டிராக்டர் மூலமாக தேர் திரும்பும் போது மணல் மற்றும் அங்கு செய்யப்பட்டிருந்த உருவ பொம்மைகளால் தேர் நிலை தடுமாறி கீழே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. நல்லவேளை பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.