Skip to main content

எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லையென மாணவன் தற்கொலை!!! வேலூரில் நிகழந்த சோக சம்பவம்!!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020
incident in vellore

 

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவ மாணவிகள் கரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் தேர்வு எழுதியதால், பயத்தில் பலரும் சரியாக தேர்வு எழுதவில்லை. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியதால், அரசும் சில தேர்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. கரோனா பரவல் மிக வேகமாக உள்ள சூழ்நிலையில் தேர்வு நடத்தக்கூடாது என திமுக உட்பட பல எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதோடு கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

 

நீண்ட தயக்கத்துக்கு பின் அதனை தமிழக அரசு ஏற்று தேர்வுகளை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தது. அதனைத்தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொது தேர்வு ரிசல்ட் வெளியிட்டது. தமிழகத்தில் வழக்கம்போல் மாணவிகள் முதல் இடத்தை பிடித்திருந்தனர்.

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு  கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலாஜி. இவரது மகன் அசோக்குமார், குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்துவந்தார். இந்த ஆண்டு பிளஸ் 2  தேர்வு எழுதியிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை தேர்ச்சி விவரம் மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில் 481 மார்க் எடுத்திருப்பதாக ரிசல்ட் வந்துயிருந்தது. அந்த பள்ளியில் இருந்து தேர்வு எழுதியவர்களில் அவர் தான் முதல் மதிப்பெண்ணாம். அவர் எதிர்பார்த்ததை விட குறைவான மார்க் எடுத்ததால் மனவேதனையில் அவர் இருந்துள்ளார்.

 

இதே மாணவன் கடந்த 10ம்  வகுப்பு பொதுதேர்விலும் 448 மதிப்பெண்  பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றுள்ளார். இதனால் 590 மார்க் எடுப்பார் என எதிர்பார்ப்பு வைத்திருந்துள்ளனர். மதிப்பெண் குறைவானதும் கவலையாகி அழுதுகொண்டே இருந்துள்ளார் மாணவன் அசோக்குமார் .

 

இந்நிலையில், ஜூலை 17 ந்தேதி விடியற்காலை, வீட்டருகே இருந்த மாந்தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஊர் மக்கள் பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவயிடத்துக்கு வந்த குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். அதிக மதிப்பெண் எடுக்க முடியவில்லை என மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Kathir Anand filed nomination

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர், அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாநகர் திமுக அலுவலகத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தொடர்ச்சியாக ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொண்டர்கள் ஆரவாரத்துடன் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக பட்டாசுகள் வெடித்து கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் எனப் பல்வேறு மேள தளங்கள் இசைத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.