வெளிநாட்டு இளம்பெண் முகநூல் பக்கத்தில் ஆபாசப் படம்; வத்தலகுண்டு வாலிபர் அதிரடி கைது!

incident in vathalakundu

வெளிநாட்டு இளம்பெண் முகநூல் பக்கத்திற்கு ஆபாசப்படத்தை அனுப்பிய வத்தலகுண்டு வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

தனது முகநூல் பக்கத்திற்கு இந்திய முகநூல் முகவரியில் இருந்து தொடர்ந்து ஆபாசப் படங்கள் வருவதாக, முகநூல் நிறுவனத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண்ஒருவர் புகார் அளித்தார். இதனையடுத்து முகநூல் நிறுவனம் ஆபாசப்படங்களைப்பதிவேற்றம் செய்த அந்த நபர் மீது, தேசிய குற்ற ஆவணப் பதிவகத்திடம் புகார் அளித்தது. அதன் தொடர் நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், வெளிநாட்டு இளம்பெண் முகநூல் பக்கத்தில் ஆபாசப்படங்களைப் பதிவிட்டவத்தலகுண்டு அருகே உள்ள மல்லனம்பட்டியைச்சேர்ந்த,கொக்கி குமார் என்ற குமரேசன்(30) மீது வத்தலகுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கொக்கி குமாரிடம்விசாரணை நடத்தியபோலீசார், சைபர் கிரைம் குற்றத்திற்காக அவரை கைது செய்தனர். முகநூல் மூலம்வெளிநாட்டுப் பெண்ணுக்கு ஆபாசப்படம் அனுப்பியது தொடர்பாக,வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் வத்தலகுண்டுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dindigul district Facebook police
இதையும் படியுங்கள்
Subscribe