Skip to main content

கரோனாவால் கடன் கட்டாததால் பைனான்சியர் மிரட்டல்... இளைஞர் தற்கொலை!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020
incident in vaniyampadi

 

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாராபாபட்டு கிராமத்தை சேர்ந்த சிரஞ்சீவி (25) அக்டோபர் 21ந்தேதி சென்னை – பெங்களுரூ இடையிலான ரயில் பாதையில் வாணியம்பாடி நகரம் வழியாக செல்லும் பாதையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் சொல்லப்பட, ஜோலார்பேட்டை இரயில்வே காவல்துறையினர் தற்கொலை வழக்கு பதிவு செய்தனர். ஏன் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை விசாரணையில், குடியாத்தம் பகுதியை சேர்ந்த பைனான்சியர் ஒருவரிடம், தனது பெயரில் உள்ள வீட்டை அடகு வைத்து 2018 ஆம் ஆண்டு 1.25 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மாதம் 5 ஆயிரம் ரூபாய் வட்டி, 2500 ரூபாய் அசல் என மாதந்தோறும் 15ந்தேதி 7500 ரூபாய் கட்டிவந்துள்ளார். தேதி தவறினால் அதற்கு தனியாக வட்டி வசூலித்துள்ளார் அந்த பைனான்ஸ் பிரமுகர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கடன் தவணை கட்டி வந்தவர், கரோனா காலத்தில் கட்ட முடியாமல் தவித்துள்ளார்.

 

incident in vaniyampadi


இதுகுறித்து கடந்த இரண்டு மாதங்களாக பைனான்ஸ் பிரமுகர் ஒருமையில் பேசி மிரட்டியதோடு, அடமானம் வைத்த வீட்டை அபகரிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் குடும்பத்தில் சண்டை வந்துள்ளது. இந்த மனஉளைச்சலால் தான் தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்துள்ளது.

 

இந்த தற்கொலை வழக்கை கந்து வட்டி பிரச்சனையால் தற்கொலை என வழக்கை மாற்றி அமைக்க வேண்டும் என இறந்தவரின் உறவினர்கள் காவல்துறையினரிடம் கேட்டுள்ளனர். அதனை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லையாம். இதனால் இறந்தவரின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வருவாய்த்துறையினர், போலீஸ் உயர் அதகாரிகள் சம்பவயிடத்துக்கு வந்து உறவினர்களிடம், நிச்சயம் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என வாக்குறுதி தந்து தற்காலிகமாக பிரச்சனையை தீர்த்துள்ளனர்.

 

குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் கந்து வட்டி பிரமுகர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.