Skip to main content

சிறுவனைக் கொன்று சோளக்காட்டில் வீசிய கொடூரன்... சைக்கோவா? போலீஸ் விசாரணை!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகிலுள்ள வடக்குமுத்துலாபுரம் கிராமத்தின் கூலித் தொழிலாளி ஜெய்சங்கர். இவர் மனைவி ரேவதி. இவர்களின் 6 வயது மகன் நகுலன். அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிப்பவன். அங்குள்ள கூட்டுறவு சங்கப் பகுதியில் சிறுவர்களுடன் விளையாடிய நகுலனை நேற்று முன்தினமிருந்து காணவில்லை. பெற்றோர்கள் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் எட்டயபுரம் போலீசில் புகார் செய்தனர்.

 

INCIDENT IN TUTUCORINE... POLICE INVESTIGATION


இதுகுறித்து விசாரித்த போலீசார் அதே ஊரைச் சேர்ந்த அருள்ராஜ்(28) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்க, அவனை நான்தான் அடித்துக் கொன்றேன் என்று சொன்னவன் உடல் கிடக்கும் இடத்தைக் காட்டாமல் போக்கு காட்டியுள்ளான். பின்னர் இன்ஸ்பெக்டர் கலா, தனிப்பிரிவு எஸ்.ஐ. சேகர் கொண்ட விசாரணை டீம் உரிய கவனிப்பில் அருள் ராஜைக் கவனிக்க, அதன் பிறகே, சிறுவனிடம் அவன் அப்பா எங்கே என்று நான் கேட்ட போது, அவன் எடக்கு மடக்காகச் சொன்னான் என்று அருள் ராஜா சொல்ல, பின்னர் போலீசாரின் சிறப்பு கவனிப்பிற்குப் பிறகே, ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தேன். அவன் மறுத்தான். ஆத்திரத்தில் அவனைத் தூக்கிச்சென்று அடித்துக் கொன்று சோளக்காட்டில் வீசியதாகச் சொல்ல, காக்கிச் சட்டைகளுக்கே குளிரிலும் வியர்த்துவிட்டது. இதனிடையே சிறுவனின் சடலம் கிடைக்கத் தாமதமாகவே, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட போக்குவரத்து ஸ்தம்பித்தது. வருவாய்த் துறையினர் அவர்களிடம் பேசி சமாதானப் படுத்தினர். பின்னர் காட்டில் கிடைத்த சிறுவனின் உடலை கைப்பற்றிய பேலீசார் உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

INCIDENT IN TUTUCORINE... POLICE INVESTIGATION


போக்சோவில் கைது செய்யப்பட்ட அருள்ராஜ் ஏற்கனவே ஒரு மூதாட்டி கொலையில் நிபந்தனை ஜாமீனிலிருப்பவன். தற்போது சிறுவனைக் கொலை செய்துள்ளான். சில வேளைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவன் போல பேசுகிறான். சைக்கோத்தனமாகவும் தெரிகிறது. சிறுவனின் உடல் போஸ்ட் மார்ட்டத்திற்குப் பிறகே காரணம் தெரிய வரும் என்கின்றனர் விசாரணைப் போலீசார்.

ஆறு வயது பாலகன் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த ஏரியாவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.