Skip to main content

லாரி ஓட்டுநர் கடத்திக் கொலை... சிக்கிய அ.தி.மு.க. புள்ளியின் ஆள்காட்டி... உடலை வாங்க மறுத்து மனைவி போராட்டம்!!

Published on 20/09/2020 | Edited on 20/09/2020
incident in tutucorine

 

தூத்துக்குடி மாவட்டத்தின் தட்டார்மடம் பகுதியின் சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த காலமான தனிஸ்லாசின் மகன் செல்வம் குடும்பத்தினருக்கும் அந்தப் பகுதியின் உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளரான திருமணவேலுவுக்கும் நிலம் தொடர்பான விவகாரம் வளர்ந்திருக்கிறது. இது குறித்து பலமுறை செல்வம், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனிடம் புகார் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத இன்ஸ்பெக்டர், திருமணவேலுவிற்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறார். அவரிடம் புகாரை வாங்கி செல்வம் மற்றும் அவரது சகோதரர்கள் மீதே வழக்குப் போட்டுச் சிறையிலடைத்திருக்கிறார்.

 

incident in tutucorine


இதனால் தனக்கு நியாயம் வேண்டி செல்வம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையிட்டிருக்கிறார். செப் 16 அன்று அதற்குப் பதில் மனு தாக்கல் செய்யும்படி இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணனுக்கு கோர்ட் நோட்டிபிகேஷன் போயிருக்கிறது. இதனிடையே கடந்த 17ம் தேதி செல்வம் சொக்கன் குடியிருப்பிற்கு தனது பைக்கில் திரும்பிக்கொண்டிருந்த போது காரால் மோதிக் கீழே விழச்செய்து அவரைக் காரில் கடத்திச் சென்ற கும்பல் உருட்டுக் கட்டைகளால் தாக்கிக் கொலைசெய்தது.

 

incident in tutucorine


திருமணவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரின் தூண்டுதலால் தனது மகன் கொலை செய்யப்பட்டார் என்று செல்வம் தாய் எலிசபெத் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை மேற்கொண்ட உயரதிகாரிகள், திருமணவேல், இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே 17ம் தேதியன்று போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட செல்வத்தின் உடலை அவரது உறவினர்கள் வாங்கவில்லை. திருமணவேல், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரையும் கைது செய்ய வேண்டும். கணவனைப் பறி கொடுத்த அவர் மனைவி செல்வஜீவிதாவிற்கு உரிய நிவாரணம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு இரண்டு நாளாகப் போராடி வருகின்றனர்.

 

incident in tutucorine


இந்த நிலையில் அடுத்த கட்டமாக சொக்கன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள ஆலயமணி அடிக்கப்பட்டு ஊரே திரண்டது. செல்வனின் மனைவி செல்வஜீவிதா மற்றும் கிராமத்தினர் அங்குள்ள தனிஸ்லாஸ் தேவாலயம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினர். பனங்காட்டுப் படையின் மா.செ.வான ஓடை செல்வமும் உடன் இருந்தார்.

 

incident in tutucorine


தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சாத்தான்குளம் தாசில்தார் ராஜலட்சுமி, உள்ளிட்ட அதிகாரிகள் செல்வத்தின் மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருமணவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் இருவரும் கைது செய்யப்படவேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணமளிக்க வேண்டும் அதுவரை உடலைப் பெறமாட்டோம் என்றனர். அதிகாரிகளின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய முத்துராமலிங்கம், சின்னத்துரை ராமன் மூன்று பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் முத்துராமலிங்கம் திருமணவேலின் மைத்துனர். சம்பவத்தில் ஆள்காட்டியாக செயல்பட்டவராம். அ.தி.மு.க. புள்ளியான இவர் புத்தன் தருவை கூட்டுறவு வாங்கித் தலைவர் பதவியிலிருப்பவர்.

உடல் பெறப்படாததால் உச்சப் பதற்றத்திலிருக்கிறது தட்டார்மடம் ஏரியா.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.