Skip to main content

தண்ணீரில் மூழ்கி சிறுவர்கள் மரணித்த சம்பவத்தில் திகில் திருப்பம்...  நடந்தது படுகொலை

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் பக்கமுள்ள அயன் பொம்மையாபுரம் காலனியைச் சேர்ந்தவர்கள் ஜோதிமுத்து, ரத்தினராஜ் சகோதரர்கள். இருவரும் லாரி டிரைவர்கள்.

மூத்தவர் ஜோதிமுத்துவிற்கு உஷாராணி, மகாலட்சுமி என இரண்டு மனைவிகள். மூத்த மனைவி உஷாராணிக்கு சீமைன் அல்போன்ஸ் ஜீசஸ் (14) என்ற மகனும் ஜாக்குலின் ரோஸி (13) என்ற மகளும் உள்ளனர். சீமைன் அல்போன்ஸ் விளாத்திகுளத்தில் 7ம் வகுப்பு பயில்பவன். 2ம் மனைவி முத்துலட்சுமியின் மகனான எட்வின் ஜோசப் (9) தனியார் பள்ளியின் 3ம் வகுப்பு மாணவன்.

சகோதரர்கள் ஜோதிமுத்துவுக்கும், ரத்தின ராஜூக்குமிடையே குடும்பப்பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மறுபடியும் தகராறும் ஏற்பட்டிருக்கிறது.

 

incident in tutucorin


இதனிடையே நேற்று முன்தினம் சிறுவர்களான சீமைன் அல்போன்ஸ், எட்வின் ஜோசப் இருவரும் ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றனர். நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவர்கள் கிணற்றில்  மூழ்கி இறந்தது தெரியவர தீயணைப்பு படையினர் சிறுவர்களின் உடலை மீ்ட்டனர். இது குறித்து டி.எஸ்.பி. முகைதீன், இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை விசாரித்தனர். அப்போது சிறுவர்களை ரத்தினராஜ் அழைத்துச் சென்றது தெரியவர, தலைமறைவாகிப் போன ரத்தினராஜை போலீசார் கைது செய்தனர். விசாரணை வாக்கு மூலத்தில் ரத்தினராஜ் தெரிவித்தது விசாரணை அதிகாரிகளையே விறுவிறுக்க வைத்துவிட்டது. ரத்தினராஜ் வாய் திறந்தது இந்தப் பயங்கரம் தான்.

 

incident in tutucorin


என் அண்ணன் ஜோதிமுத்துவுக்கும் உஷாராணிக்கும் 2005ல் திருமணம் நடந்தது உஷாராணியின் தங்கை மகாலெட்சுமியை நான் திருமணம் செய்ய நினைத்தேன். நான் குடிகாரன் என்பதால் திருமணம் செய்து வைக்க மறுத்தனர். ஆனால் மகாலெட்சுமியை அவரது பெற்றோர் எனது அண்ணனுக்கு 2வதாக திருமணம் செய்து வைத்ததால் நான் ஆத்திரமானேன். நான் விரும்பிய பெண்ணை அண்ணன் மணமுடித்ததால் வேதனை எனக்கு. அதனால் அவரோடு எனக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் நான் குடித்து விட்டுத் தகராறு செய்வதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு எனது மனைவி அவளது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.

தொடர்ந்து எனக்கும் அண்ணனுக்கும் தகராறு நடந்தது. ஆத்திரமான நான், எனது அண்ணன் மகன்களை நீச்சல் கற்றுத் தருவதாக அழைத்துச் சென்று முதலில் எட்வின் ஜோசப்பை கிணற்றில் தள்ளி விட்டுப் பின் சீமைன் அல்போன்ஸை தள்ளி விட்டுத் திரும்பிப் பாராமல் வந்து விட்டேன்.

என்று சலனமில்லாமல் சொல்லியிருக்கிறான் ரத்தினராஜ். விசாராணைக்குப் பின் போலீசாரால் ரீமாண்ட் செய்யப்பட்டான்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.