incident in tiruchy...police arrest

திருச்சியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளி மாணவர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

Advertisment

திருச்சி மணப்பாறையில் 9 வயது சிறுமி ஒருவர் காயங்களுடன் தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டு திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது. ஆனால்அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில்,இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்த கொலை சம்பந்தமாக பள்ளி மாணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாலியல் தொல்லையின்பொழுது சிறுமி சத்தம் எழுப்பியதால்கல்லை கொண்டு தாக்கி சிறுமியை கொன்றதாக போலீஸ் விசாரணையில் மாணவன் தெரிவித்ததாக தகவல்கள் வந்துள்ளது.