Skip to main content

இரட்டைக் கொலை... கொலையாளியின் வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீசார்!

Published on 31/08/2022 | Edited on 31/08/2022

 

incident thoothukudi

 

தூத்துக்குடியின் விளாத்திகுளம் பக்கமுள்ள பூதலாபுரம் பஸ் நிறுத்தம் அருகே பெட்டிக் கடை நடத்தி வருகிறவர் ராஜாமணி (68) இவரது கணவர் பிச்சையா 12 ஆண்டுகட்கு முன்பே காலமாகிவிட்டார். மகன்கள் இருவரும் வெளியூரில் கூலி வேலை செய்து வருபவர்கள். எனவே மூதாட்டி ராஜாமணி தனியாக வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ராஜாமணியை மர்ம நபர்கள் அளிவாளால்  வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். தகவலறிந்து  சம்பவ இடம் வந்த புதூர் மற்றும் காடல்குடி போலீசார் ராஜாமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து ராஜாமணியின் பக்கத்து வீடும் திறந்து கிடந்ததால் அங்கு தனியாக வசித்து வந்த பொன்னுசாமி (60) என்பவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. அடுத்தடுத்து நடந்த இரட்டைக் கொலை அதிர்ந்து போனது அக்கம் பக்கம் ஏரியா பகுதிகள்.

 

பின்னர் அமைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பூதலாபுரத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரைக் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் சுப்பையா அளித்த வாக்குமூலத்தில், ராஜாமணி நடத்தி வந்த பெட்டிக் கடையில் நான் அடிக்கடி பீடி மற்றும் சிகரெட் வாங்குவேன். தவிர நான் அடிக்கடி மதுக்குடித்து விட்டு வருவதால் ராஜாமணி பல முறை என்னைத் திட்டியுள்ளார். ஊர் மக்களிடம் என்னைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். இதே போன்று முடி திருத்தம் தொழில் செய்து வந்த பென்னுசாமியும் என்னைப் பற்றி மக்களிடம் அவதூறாக கூறியுள்ளார் இவர்களின் பேச்சால் ஆத்திரமடைந்த நான் ராஜாமணி, பொன்னுசாமி இருவரையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன்.

 

அதே ஆத்திரத்தோடு சம்பவத்தன்று அதிகாலை பொன்னுசாமி வீட்டுக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றேன். அடுத்து ராஜாமணியையும் அதே அரிவாளால் வெட்டிக் கொலை செய்தேன் என்று வாக்கு மூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

இதையடுத்து கொலைக்குப் பயன்படுத்திய அரிவாள், தப்பியோடப் பயன்பட்ட இரு சக்கரவாகனத்தையும் பறிமுதல் செய்தனர். போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தி ரிமாண்ட் செய்தனர். அவதூறாகப் பேசியதால் வெட்டிக் கொன்றேன் என்கிற வாக்குமூலம் ஏரியாவைக் கலக்கியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.