Skip to main content

கரோனா பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் நெஞ்சுவலியால் மரணம்!!!

Published on 03/04/2020 | Edited on 03/04/2020

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ளது களம்பூர். இந்த பேரூராட்சியின் காவல்நிலைய தலைமை காவலராக இருந்தவர் குப்பன். 52 வயதான இவர் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள 144 தடையுத்தரவை முன்னிட்டு களம்பூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

 

incident in thiruvannamalai


ஏப்ரல் 3ந்தேதி விடியற்காலை பாதுகாப்பு பணியில் இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து சக காவலர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து பரிசோதித்தபோது, அவர் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. இந்த தகவல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்திக்கு தெரியப்படுத்த அவர் அதிர்ச்சியாகியுள்ளார். இதுப்பற்றி மாவட்ட ஆட்சியரிடமும் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணியில் சுகாதாரத்துறையினர், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகதுறையினர் என ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது இறந்தது பல தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

காலை முதல் மாலை வரை பாதுகாப்பு பணியில் நின்றுக்கொண்டு, காரணமே இல்லாமல் வெளியே வருபவர்களை எச்சரித்து, அவர்களை திரும்ப வீட்டுக்கு அனுப்புவதே பெரும் மன உளைச்சளாக இருக்கிறது என்றனர் பல காவலர்கள். மேலும், வெளியே வராதீர்கள் என ஒருமுறை சொல்லலாம், இரண்டு முறை சொல்லலாம், வேண்டும்மென்றே வருபவர்களை எப்படி அடக்குவது. யாரையும் மிரட்டாதிங்க, அடிக்காதிங்க, தோப்புக்கரணம் போடச்சொல்லாதிங்கன்னு மேலதிகாரிகள் சொல்லிட்டாங்க.

பைக் எடுத்துக்கிட்டு சர்ரன்னு வர்றவங்களை நிறுத்தி வெளியே வராதிங்க, நோய் பரவுதுன்னு சொன்னா யார் கேட்கறாங்க. இதுவே பெரிய மனஉளைச்சலா இருக்கு. அந்த மனஉளைச்சலில்தான் அவர் நெஞ்சுவலி வந்து இறந்துவிட்டார் என்கிறார்கள்.

பணியில் இருக்கும்போதே இறந்த தலைமை காவலர்களுக்கு காவல்துறை சார்பில் இறுதி மரியாதையும், அவரது குடும்பத்துக்கு அரசின் சிறப்பு நிதி வழங்கவும் எஸ்.பி. சிபிசக்கரவர்த்தியால் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் காவல்துறை தரப்பில்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.