Skip to main content

கரோனாவால் மருத்துவமனையில் மகன்... வீட்டு வாசலிலில் உயிரிழந்த தாய்... 4 மணி நேரமாகக் கண்டுகொள்ளாத நகராட்சி!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

incident in thiruthani

 

திருத்தணி அருகே மகன் கரோனாவிற்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வீட்டில் வயதான தாய் உயிரிழந்துள்ளார். உயிரிழந்து 4 மணிநேரமாகியும் அவரது உடலை எடுக்க யாரும் முன்வராத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட அங்காலம்மன் தெருவைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி வீட்டு வாசலிலேயே உயிரிழந்துள்ளார். அவரது மகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து அவருக்கு வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் இருந்த வீடு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. வீட்டில் அவரது தாய் மட்டும் இருந்தார்.  இன்று காலையில் மூதாட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினர் திருத்தணி அரசு மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த மருத்துவப் பணியாளர்கள் வீடு கரோனாவிற்காக தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாது எனக்கூறிவிட்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து அவர் உயிரிழந்திருக்கிறார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாக அவரது சடலத்தை எடுப்பதற்கு நகராட்சி நிர்வாகமோ அல்லது சுகாதாரத்துறையினரோ வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடமும், சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து புகார் தெரிவித்தும் கூட இறந்தவரின் சடலத்தை மீட்க அவர்கள் வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தெரியவர, அவர் உத்தரவின் பெயரில் இறந்தவரின் உடலை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.