ADVERTISEMENT

இந்து முன்னணி பிரமுகர் காருக்கு தீவைப்பு...!! 

12:43 PM Feb 12, 2020 | kalaimohan

திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி கோட்ட செயலாளராக இருப்பவர் மோகன சுந்தரம். கொங்கு நகர் திருநீலகண்டபுரம் குமரன் பால்பண்ணை அருகே உள்ளது அவரது வீடு.

ADVERTISEMENT


இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் முன்பு இரண்டு டூ வீலரில் முகத்தை மூடியபடி நான்கு பேர் வந்து இறங்கி கார் டயரில் பாஸ்பரஸ் பொடியை தேய்த்து பின்பு தீக்குச்சியை உரசி டயர் மேலே வீசியதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதனால் ஏற்பட்ட தீயினால் கார் முழுவதும் எரிந்தது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொங்கு நகர் முழுக்க கடையடைப்பு, சாலை மறியல் என இந்து அமைப்புகள் அனைத்தும் ஒன்று கூடி குற்றவாளிகளை கைது செய் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று திருப்பூர் மாநகராட்சி முன் மாலை 3 மணிக்கு இந்து முன்னணியினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT