கோவையில் ஈச்சர் வேன், டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து... இரண்டு பேர் பலி!

incident in  thirupur

திருப்பூர் மாவட்டம் மானுபட்டியை சேர்ந்த வீராசாமி கோவையில் இருந்து கேரளாவில் தக்காளி லோடு இறக்கி விட்டு,மீண்டும் கோவை நோக்கி வந்துள்ளார். அப்போது ஈச்சர் வேன் கோவைசெட்டிபாளையம் எல்.அன்.டி. பைபாஸ் அருகே வந்த போது, சேலம் மேடூரில் இருந்து கேரளா நோக்கி ஹைட்ரோகுளோரிக் லோடு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஈச்சர் வேன் மீது மோதியது.

இதில் இரண்டு வாகனங்களும் சாலையில் இருந்து வெளியே உருண்டு விழுந்தது. இதில் ஈச்சர் வேனில் வந்த வீரசாமி மற்றும் கிளினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.டேங்கர் லாரியில் வந்த சேகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி உடல்களை மீட்டனர். மேலும் டேங்கரில் இருந்து ஹைட்ரோகுளோரிக் வாயு வெளியேறுவதால் அதே இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

accident thirupur
இதையும் படியுங்கள்
Subscribe