Skip to main content

'உன் கர்ப்பத்துக்கு நான் தான் காரணம்னு எப்படி சொல்ற'– கர்ப்பத்தை கலைக்கச்சொல்லி மிரட்டும் கட்டப்பஞ்சாயத்து கும்பல் 

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள  கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான வருண் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கோவிந்தாபுரத்தின் அருகேயுள்ள வீராங்குப்பம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த இரண்டு வருடமாக காதலித்துள்ளார்.

காதலர்கள் ஜாலியாக பலயிடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்படி சென்றயிடத்தில் உன்னை தானே திருமணம் செய்துக்கொள்ள போகிறேன், உன்னை நான் எப்பவும் கைவிடமாட்டேன் எனச்சொல்லி காதலியிடம் நயமாக பேசி உடல் ரீதியான உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இதனால் கர்ப்பமான அந்த இளம்பெண், அதுப்பற்றி தனது காதலனான வருணிடம் சமீபத்தில் கூறி திருமணம் செய்துக்கொள்ளலாம் என்றுள்ளார்.

 

INCIDENT IN THIRUPATHUR

 

உன் கர்ப்பத்துக்கு நான் தான் காரணம்னு நீ சொல்றதை நான் எப்படி நம்பறது என விதி படத்தின் டைலாக்கை வீசியவன் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள மறுத்துள்ளான். இதனால் அதிர்ச்சியான அந்த இளம்பெண், தனது குடும்பத்தினரிடம் விஷயத்தை கூறி அழுதுள்ளார். அவர்கள் பெண்ணின் வாழ்க்கையை நினைத்து அதிர்ச்சிந்துப்போய் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார்.

புகார் தந்து ஒருவாரத்துக்கு மேலாகியும் காவல்துறை அந்த இளைஞனை அழைத்து விசாரிக்காமல் கட்டப்பஞ்சாயத்து குருப் ஒன்றிடம் தகவல் அனுப்பியுள்ளனர் போலீஸார். அதனை தொடர்ந்து, தேவலாபுரம் பகுதியில் கட்டப்பஞ்சாயத்து கும்பல், அந்த பெண்ணை அழைத்து 50 ஆயிரம் பணம் தருவான், வாங்கிக்கிட்டு புகாரை வாபஸ் வாங்கிக்கிட்டு ஓடிப்போ, உன்னையெல்லாம் கல்யாணம் செய்துக்கமாட்டான் என பிப்ரவரி 16ந்தேதி பேசி மிரட்டியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது வெளிவந்து ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், திருவண்ணாமலை நகரில் போட்டோகிராபராக உள்ள ஒரு இளைஞர், மிகவும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். இந்த காதலை பெண்ணின் குடும்பத்தார் மறுத்து, நீங்க மேல்சாதிக்காரங்க, ஊர்ல பெரிய குடும்பம் வேண்டாம் என தொடக்கத்திலேயே மறுத்துள்ளனர். கட்டினால் உங்க பொண்ணை தான் கட்டுவன் என அந்த இளைஞன் வாக்குறுதி தந்துள்ளான். காதலில் உறுதியாக இருந்ததால் அந்த இளம்பெண்ணும் காதலித்துள்ளார். 5 வருட காதல் திடீரென நீ வேறு சமூகம் எனச்சொல்லி அவன் திருமணம் செய்துக்கொள்ள மறுக்க காவல்நிலையத்தில் அந்த பெண் புகார் தந்துள்ளார். அந்த இளைஞனை போலீஸார் தேடிவருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 24 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த  ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்  அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை  வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.

Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி  காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

‘வண்டில என்ன கம்ப்ளைண்ட்?, வண்டியே கம்ப்ளைன்ட் தான்!’- அரசு பேருந்து ஓட்டுநரின் புலம்பல் 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Govt bus driver video goes viral

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சர்வீஸ் சாலையில் வர வேண்டிய பேருந்து நெடுஞ்சாலையில் சென்றதால் ஆத்திரமடைந்த  பயணி இத்தனை நாளா பஸ் கீழே வந்துச்சு இப்ப ஏன் கீழ வரல வண்டில என்ன கம்பிளைன்ட்? என கேட்க வண்டியே கம்பளைண்ட் தான் என்று ஓட்டுநர் கூறும் விதம் வைரல் ஆகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம்  நாட்றம்பள்ளி  சென்னை - பெங்களூர் ஆறு வழி தேசிய நெடுஞ்சாலை  பகுதியில் மேம்பாலத்தின் வழியாக பேருந்துகள் செல்வதால், சர்வீஸ் சாலையில் பேருந்துகள் வந்து செல்லாமல் இருந்தது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சுமார் 40 அடி உயரம் மேலே ஏறி சென்று பேருந்தில் பயணம் செய்யும் நிலை இருந்தது. இதனை அறிந்த தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் சமீபத்தில் சர்வீஸ் சாலை அமைத்தது. தொடர்ந்து பல்வேறு அரசு பேருந்துகள் சர்வீஸ் சாலை வழியாக சென்று வந்தது.

Govt bus driver video goes viral

சர்வீஸ் சாலை வழியாக செல்லும்போது பேருந்து கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக தாமதமாக செல்லக்கூடிய நிலை இருப்பதால் ஓட்டுநர்கள் மேம்பாலத்தின் வழியாகவே பேருந்தை இயக்கி செல்கின்றனர். இதனால் வயதானவர்கள், குழந்தைகள் ஏரி வர சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணி ஒருவர் ஏறி பேருந்து கீழே வராமல் ஏன் மேலே செல்கிறீர்கள்? பேருந்தில் என்ன கம்பளைண்ட் என்று ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அப்போது ஓட்டுநர் செய்வதறியாமல் திகைத்து, “வண்டியே கம்ப்ளைன்ட் தான் என்கிட்ட கேட்டு என்ன பண்றது. நானே இதை வச்சு ஓட்டிட்டு இருக்கிறேன் போய் அதிகாரிகளை கேளுங்க...” என்று பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.