incident in thiruchy

Advertisment

திருச்சியில் காவலர் ஒருவர் தாயின் சேலையை பயன்படுத்தி,மாட்டுக் கொட்டகையில்தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஜீயபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ஆனந்த். இவர் ஆன்லைனில் அதிகமாக ரம்மி விளையாடும் பழக்கம் கொண்டவர்கள் கூறப்படுகிறது.சக காவலர்களிடம்கடன் வாங்கி ஆன்லனில்ரம்மி விளையாண்டுவந்த நிலையில், இன்று காலை அவர் அவரது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் அவருடைய தாயினுடைய சேலையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட ஆனந்த்கடன் வாங்கி ரம்மிவிளையாடியதால் ஏற்பட்டகடனை திருப்பி செலுத்த முடியாதமன உளைச்சலுக்கு ஆளாகிஇருந்ததாகவும், அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும்கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டஅவரதுஉடலை மீட்ட போலீசார், தற்கொலைக்கு காரணம் ரம்மி விளையாடியதால்ஏற்பட்டகடனா அல்லது காதல் விவகாரமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.