திருச்சியில் காவலர் ஒருவர் தாயின் சேலையை பயன்படுத்தி, மாட்டுக் கொட்டகையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஜீயபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ஆனந்த். இவர் ஆன்லைனில் அதிகமாக ரம்மி விளையாடும் பழக்கம் கொண்டவர்கள் கூறப்படுகிறது. சக காவலர்களிடம் கடன் வாங்கி ஆன்லனில் ரம்மி விளையாண்டு வந்த நிலையில், இன்று காலை அவர் அவரது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் அவருடைய தாயினுடைய சேலையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட ஆனந்த் கடன் வாங்கி ரம்மி விளையாடியதால் ஏற்பட்ட கடனை திருப்பி செலுத்த முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும், அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட அவரது உடலை மீட்ட போலீசார், தற்கொலைக்கு காரணம் ரம்மி விளையாடியதால் ஏற்பட்ட கடனா அல்லது காதல் விவகாரமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.