Skip to main content

அவமானமடைந்த ஆத்திரத்தில் நிகழ்ந்த கொலை-திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published on 29/11/2020 | Edited on 30/11/2020
incident in thiruchy

 

திருச்சியில் கடந்த 26.10.2020 அன்று ஆட்டோ ஓட்டுநரை வீட்டு வாசலில் வைத்து அவரது குடும்பத்தின் கண்முன்னரே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி, திருவானைகோவில் அருகே ஆட்டோ ஓட்டி வருபவர் முருகன். அதே பகுதியில் உள்ள பாரதி நகரை சோ்ந்த குணசேகரன் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகியோர் கறிக்கடை நடத்தி வருகின்றனா். ஆட்டோ ஓட்டுநர் முருகனுக்கு சொந்தமான ஆட்டை திருட வந்ததாக  குணசேகரன் மற்றும் மனைவி பரமேஸ்வரி இருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முருகன் ஸ்ரீரங்கம் காவல நிலையத்தில் அவா்கள் மீது புகார் கொடுத்தார். ஆடு திருட முயன்றதாக முருகன் கூறிய புகாரால் அவமானமும்,  ஆத்திரமும் அடைந்த பரமேஸ்வரி அவருடை மகள் வழக்கறிஞர் முத்துலட்சுமி, மகன் மணிகண்டன் இருவரும் வெளியூரில் பணியாற்றி வரும் நிலையில், அவா்களை வரவழைத்து முருகனை கொலை செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

 

இதனால் மணிகண்டனுடை கூட்டாளிகளான அருண்குமார்(17), ஹரிஹரன்(17, செல்வகுமார்(16), ராஜேஷ்(17), கண்ணன்(17), நரேஷ்(16) உள்ளிட்டவா்களுடன் முருகனுடைய வீட்டிற்கு சென்று முருகனை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து, அவருடைய குடும்பத்தின் கண்முன்னரே அவரை சரமாரியாக வெட்டி கொன்றனர். இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மணிகண்டனின் கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். குணசேகரன், பரமேஸ்வரி அவரது மகள் முத்துலட்சுமி உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்த நிலையில், அவா்களைப் பிடிக்க திருச்சி மாநகர காவல்துறை ஆணையா் லோகநாதன், ஸ்ரீரங்கம் உதவி ஆணையா் சுந்தரமூா்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. 

 

தேடுதலில், அவா்கள் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி இருப்பதாக கிடைத்த தகலின் அடிப்படையில் 28.11.2020 அன்று அவர்களை கைது செய்தனர். அவா்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பரமேஸ்வரியின் மருமகன் விக்னேஷ், குணசேகரனின் தம்பி முத்துக்குமார் உள்ளிட்டவா்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்திற்கு காரணமாகவும், மூளையாகவும் செயல்பட்ட பரமேஸ்வரியின் மகள் வழக்கறிஞர் முத்துலட்சுமி மீது வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.