Skip to main content

கல்குவாரி பள்ளத்தில் சிறுமி சடலம் ; பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை!

Published on 02/10/2019 | Edited on 02/10/2019

திண்டிவனம் அடுத்த நல்லாளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-துர்கா தேவி இவர்களின் குழந்தை கவிதாஸ்ரீ(10) இவர் திண்டிவனத்தில் உள்ள ஆரம்பபள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 3 ஆம் தேதி காலையில் வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு கருவேப்பிலை வாங்கிவர சென்றுள்ளார். சென்றவர் பல மணி நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் கடைக்கு தேடிச் சென்றனர். கடையில் கேட்டபோது கருவேப்பிலை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார் என தெரிவித்தனர். இதையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
 

incident in thindivanam

 

ஆகையால் மாலை கவிதாஸ்ரீயின் தாய் துர்காதேவி பிரம்மதேசம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வு செய்தனர். மேலும் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் 4 ஆம் தேதி அவரது வீட்டின் பின்புறமுள்ள மணி என்பவருக்கு சொந்தமான செயல்படாத கல்குவாரியில் உள்ள நீரில் கவிதாஸ்ரீ பிணமாக மிதந்தார். உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரம்மதேசம் போலீசார் விசாரணை தொடங்கினர்.

பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பிரம்மதேசம் போலிசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தார்.
அப்போது குற்றவாளியின் செருப்பு அங்கு கிடந்துள்ளது. அதனை கைப்பற்றி கவிதாஸ்ரீயின் தாயிடம் விசாரித்தனர்.
 

incident in thindivanam

 

அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராசையா மகன் மகேந்திரன் (42) என்பவர் முன்விரோதம் காரணமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது. விசாரணையில் பழிவாங்கும் எண்ணத்தில் பாலியல் வன்கொடுமை செய்து  கொலை செய்ததாக மகேந்திரன் ஒப்புக்கொண்டார். போலீசார் கைது செய்து  மகேந்திரனை கடலூர் சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.