கல்குவாரியில் மிதந்த சடலம்... கலப்பு திருமணத்தால் கொலையா?

incident in thenkasi

தென்காசியில் கல்குவாரியில் சடலமாக இளைஞர் மீட்கப்பட்ட நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த அர்விந்த் என்ற இளைஞர் காணாமல் போனதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தென்காசி மாவட்டம் கீழ்ப்புலியூர் பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் அர்விந்தின் சடலம் மீட்கப்பட்டது. இது கொலை என சந்தேகிக்கும் போலீசார் முதற்கட்டமாக 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் அர்விந்த் கலப்பு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும்நிலையில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Investigation police thenkasi Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe