Skip to main content

தென்காசியில் நடந்த மெகா கொள்ளை... சகோதரனின் மகனே நடத்தி்ய கொள்ளையால் மூன்று பேர் கைது!

Published on 11/10/2020 | Edited on 11/10/2020
incident in thenkasi

 

தென்காசியிலுள்ள தொழிலதிபர் ஜெயபாலன் தன் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்திருக்கிறார் அவரது மனைவி விஜயலட்சுமி. கடந்த மாதம் 7ம் தேதியன்று மதியம் புல்சர் பைக்கில் பர்தாவுடன் ஒருவர் பின் அமர்ந்திருந்தபடி வந்தவர்கள் விஜயலட்சுமியின் வீடு புகுந்து அவரைக் கட்டிப் போட்டு வாயி்ல் டேப் ஒட்டிவிட்டு பீரோவில் இருந்த 126 பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் 35 லட்சம் மதிப்புள்ளவைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தென்காசியில் நடந்த பட்டப் பகல் மெகா கொள்ளைச் சம்பவம் அதிர்வலைகளைக் கிளப்பியது. தென்காசி எஸ்.பி.யான  சுகுணாசிங் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினார்.அதன் பலனாய் இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டன், ரமேஸ் மற்றும் அருண் சுரேஷ் என மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்த நகையும் மீட்கப்பட்டுள்ளன.

விசாரணையில் மணிகண்டன் ஜெயபாலன் உறவினர். அவரது வீடு வரை வந்து சென்ற பழக்கம் கொண்டவர்.சென்னை கேளம்பாக்கத்திலுள்ள ஜெயபாலனின் மர அறுவை மில்லில் வேலை செய்பவர். இவருடன் அவரது நண்பர்களான ரமேஷ் மற்றும் மேலக்கடையநல்லூர் அருண்சுரேஷ் மூவரும் சேர்ந்தே இக்கொள்ளையை நடத்தியுள்ளனர். இதில் புல்சர் பைக்கை ஒட்டி வந்தவன் ரமேஷ் அடையாளம் தெரியாமலிருக்க பர்தா வேஷத்திலிருந்தவன் மணிகண்டன். ரமேஷ் மட்டுமே கொள்ளையின் போது விஜயலட்சுமியை மிரட்டினான். பர்தா மணிகண்டன் பேசவில்லை. பேசினால் தன் குரல் அடையாளம் தெரிந்து விடும் என்பதால் பேசவில்லை.

இது குறித்து நாம் எஸ்.பியான சுகுணாசிங்கிடம் பேசியபோது,

 

incident in thenkasi


கொள்ளையின் போது ஒருவர் மட்டுமே பேசினார். மற்றவர் பேசவில்லை. அவர் உறவினராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்தது. கண்காணித்ததில் மணிகண்டன் ஒரு நகையை எடுத்துக் கொண்டு போய் சென்னையில் அடகுவைத்தது தெரிய வந்தது. அதைக் கொண்டு அவன் பிடிபட்டதும் கூட்டாளிகள் இருவரும் சிக்கினர். அவர்களிடமிருந்து மொத்த நகையும் மீடகப்பட்டு கார், பைக் கொள்ளைக்குப் உபயோகப்படுத்தப்பட்ட சிம்கார்டு கைப்பற்றப்பட்டது என்றார்.

பிடிப்பட்ட மணிகண்டன் தொழிலதிபர் ஜெயபாலனின் சகோதரன் மகன் ஆவார். மணிகண்டனின் அத்தை மகன் அருண்சுரேஷ். கரோனாவால் ஏற்பட்ட வறுமை வேலையின்மை வசதியான வாழ்க்கைக்காகத் திருடியதாக மூவரும் தெரிவித்துள்ளனர். இவர்களின் வறுமை கரோனாவின் மறைமுகத் தாக்குதலால் விளைந்த வினை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.