incident in theni temple festival

Advertisment

தேனியில் கோவில் திருவிழாவில் ராட்டினத்திற்குமின் இணைப்பு கொடுக்க முயன்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் வீரபாண்டியில்உள்ள கௌரிமாரியம்மன்கோவிலின்10 நாள் திருவிழா நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருவிழாவிற்காக ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு அரங்குகள் கொண்டுவரப்பட்டு அமைக்கப்பட்டது. அதில் ராட்டினத்திற்குமின் இணைப்பு கொடுப்பதற்காக உப்பார்பட்டியைசேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞர் அலுமினிய ஏணியைஎடுத்து சென்றுள்ளார். அப்பொழுது பெரிய மின் விளக்கில் இருந்து ஏணியின் மீது மின்சாரம் தாக்கி இளைஞர் முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழா சமயத்தில் ஏற்பட்ட இந்த உயிரிழப்பு சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும்வெளியாகி வைரலாகி வருகிறது.