
மாயக்கண்ணாடிஇருப்பதாகக்கூறி ஒரு லட்சரூபாயைப்பறித்துச்சென்ற சம்பவம் தேனியில் நிகழ்ந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேமாயக்கண்ணாடிஇருப்பதாகக்கூறி கும்பகோணத்தைச் சேர்ந்தயுவராஜ்என்பவரிடம் ஒரு லட்சம்ரூபாய் மோசடி செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் இருவருக்குத்தொடர்பிருக்கும் நிலையில்அரசமுத்துஎன்ற நபரை முதற்கட்டமாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மற்றொருநபரைத்தேடிவருகின்றனர்.
கடந்த12ஆம்தேதிதிருச்சியிலும்இதேபோன்றசம்பவம்நிகழ்ந்திருந்தது. திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி. இவருக்குத் தாலி தோஷம் இருப்பதாகவும் அதனால்தாலிக்குப்பூஜை செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் எனவும் குடுகுடுப்பைக்காரர் ஒருவர்கூறியுள்ளார்.இதனைநம்பிய சுகந்தி, அவரதுஒன்றரைபவுன் தாலிச் சங்கிலியைக் குடுகுடுப்பைக்காரரிடம் கொடுத்துள்ளார். அதனை மோசடி செய்து அவர் ஏமாற்றி எடுத்துச் சென்றுள்ளார்.இந்நிலையில், தாலிச் சங்கிலியைப்பறிகொடுத்ததைஉணர்ந்த சுகந்தி மன உளைச்சலில்வீட்டில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டதாகத்தகவல் வெளியாக, சம்பவஇடத்திற்குச்சென்றபோலீசார்சுகந்தியின் உடலைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)