Advertisment

தஞ்சை திருக்காட்டுப்பள்ளியில் தனியார் பேருந்து மீது சாலையோர மின்கம்பி உரசி விபத்து... நால்வர் உயிரிழப்பு! 

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தனியார் பேருந்து மீது மின்கம்பி உரசிஏற்பட்ட விபத்தில்4 பேர்உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

Advertisment

தஞ்சைமாவட்டம் திருவையாறு அடுத்த திருக்காட்டுப்பள்ளியில் உள்ளவரகூரில்இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. திருக்காட்டுபள்ளியில் இருந்து இன்று காலைதஞ்சைசென்ற தனியார் பேருந்து எதிரே வந்தலாரிக்கு வழிவிடுவதற்காக ஒதுங்கியபோது சாலையின் ஓரம், சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்டகுழியில் இறங்கியது. அதோடு மட்டுமல்லாமல் சாலையின்ஓரத்தில்இருந்தமின்கம்பத்தில் தாழ்வாக தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பி பேருந்தின் மீது உரசியுள்ளது. இதனால் மின்சாரம் பாய்ந்ததில்பேருந்தில் இருந்தகல்யாணராமன், கணேசன்,நடராஜன் ஆகிய மூன்றுபேர்உயிரிழந்தனர். அதேபோல்இந்த விபத்தில் சிக்கியமாரியம்மா,கவிதாஆகியோர்சிகைச்சைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், கவிதாசிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.அதேபோல் பத்துக்கும் மேற்பட்டோர்லேசான காயத்துடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Advertisment

இந்த விபத்திற்கு பேருந்து ஓட்டுநர் காரணமா அல்லது மின்சார வாரியத்தின் அலட்சியமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். தனியார் பேருந்து மீது மின்கம்பி உரசி ஏற்பட்ட விபத்தில்4 பேர் உயிரிழந்தசம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Electricity accident private bus Thanjai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe