Advertisment

கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து... ரயில் நிலையத்தில் பரபரப்பு!

incident in Tambaram

Advertisment

ரயில் நிலையத்தின் வாசலிலேயே கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தாம்பரத்தில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

தாம்ரபரம்ரயில் நிலையத்திற்குச் சென்ற கல்லூரி மாணவி ஸ்வேதா என்பவரை ராமு என்றஇளைஞர்பட்டப்பகலிலேயே கத்தியால் குத்தியுள்ளார். கல்லூரி மாணவியை தாக்கியதோடுதன்னுடைய கழுத்தையும் கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் ராமு. காயமடைந்த இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் மாணவி ஸ்வேதா சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். காதல் விவகாரத்தில் இளைஞர் அந்தப் பெண்ணைக் கத்தியால் குத்தினாராஎன்பது தொடர்பாக சேலையூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டுஸ்வாதி என்ற இளம்பெண்நுங்கம்பாக்கம்ரயில் நிலையத்தில்இதேபோல்கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

incident college student railway station thambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe