Skip to main content

உணவகத்தில் பார்சல் வாங்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த அத்துமீறல்... சிசிடிவியால் சிக்கிய போதை மாணவர்கள்!!

Published on 10/10/2021 | Edited on 12/10/2021

 

incident sivakangai... cctv footage... police investigation

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கஞ்சா போதையில் பெண்ணிடம் அத்துமீறி தகராறில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அழகப்பா பல்கலை பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்துவரும் அசோக் கோபிநாத் என்ற மாணவன், அவர் வாங்கிய புது இருசக்கர வாகனத்திற்காக அவரது நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளான். அவருடைய நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்த கோபிநாத், அதன் பிறகு அவர்களைச் சாப்பிடுவதற்காக ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளான். அப்பொழுது அதே உணவகத்திற்கு உணவு பார்சல் வாங்கப் பெண் ஒருவர் அவரது கணவருடன் வந்திருந்தார். கணவர் ஹோட்டலின் உள்ளே உணவு பார்சல் வாங்கக் காத்திருந்த நிலையில் இளம்பெண் கடையின் வாசலிலேயே கணவருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு போதையில் வந்த அழகப்பா கல்லூரி மாணவர்களில் ஒருவனான முகமது சல்மான் என்பவன் போதையில் தள்ளாடியபடியே ஹோட்டலுக்குள் நுழையும்போது வெளியில் நின்ற அந்த இளம்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். அவரது தலையிலிருந்த பூவை கைகளால் இழுத்துவிட்டுச் சென்றுவிட்டான். இதனால் பதறிப்போன அந்த இளம்பெண் ஹோட்டலுக்குள் சென்று பார்சலுக்காக காத்திருந்த கணவரிடம் அமர்ந்துகொண்டார். அதன் பின்னரும் விடாத முகமது சல்மான் என்ற அந்த மாணவன் ஆபாச சைகை காண்பித்து அழைத்துள்ளான். இதனையடுத்து அப்பெண்ணின் கணவர் அவருக்குத் தெரிந்த நபருக்கு தொலைப்பேசியின் மூலம் தகவலளித்துள்ளார்.

 

இதனைத் தெரிந்து கொண்ட முகமது சல்மான் அந்த பெண்ணின் கணவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயல, பெண்ணின் கணவரும் அவனை எச்சரித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கஞ்சா போதையிலிருந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு இளம்பெண்ணின் கணவரைக் கடுமையாகத் தாக்கினர். ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் தடுக்க முயன்ற போதிலும் அவர்கள் கஞ்சா போதையிலிருந்ததால் கடுமையாகத் தாக்கத் துவங்கினர். அந்த இளம்பெண் அங்கிருந்த ஊழியர்களிடம் சண்டையை விலக்கி விடுமாறு கதறி அழுதும் யாரும் பெரிதாகத் தடுக்க முன்வரவில்லை.

 

CCTV

 

 

இந்த காட்சிகள் அனைத்தும் ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் குறித்து வெளியே தெரிய வேண்டாம் எனத் தம்பதியினர் விட்டுவிட்ட நிலையில், ஹோட்டல் கடைக்காரர்களும் நமக்கு எதற்கு வம்பு என்று போலீசாரிடம் புகார் அளிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால் ஹோட்டலில் நடைபெற்ற சண்டையின்போது 2 செல்போன்களை மாணவர்கள் தவறவிட்டுள்ளனர். இதனையடுத்து செல்போனை ஹோட்டல் கடை உரிமையாளரிடம் இருந்து மீட்டுத் தருமாறு மாணவர்கள் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரிக்கையில் ஹோட்டலில் நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. போதை மாணவர்கள் முகமது சல்மான், அசோக் கோபிநாத், ஹரிகரன், அஸ்வின் ஆகிய 6 பேரைக் கைது செய்த போலீசார், மேலும் 7 பேரை இது தொடர்பாகத் தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.