Skip to main content

நடுநிசி 1 மணிக்கு சுடுகாட்டில் நிர்வாண பூஜை.. 3 மணிக்கு காதலிக்காக கணவன் கொலை... சிக்கிய ராமேஸ்வரம் சாமியார்..!!!

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

பில்லி சூனியம், செய்வினை மாந்தீரீகத்தால் ஏற்பட்ட தகாத தொடர்பு பழக்கத்தால் நடுநிசியில் சுடுகாட்டில் நிர்வாண பூஜையை முடித்துவிட்டு, அதற்கடுத்த இரண்டு மணி நேரத்தில் காதலி, கூட்டாளிகள் துணையுடன் கணவனை கொலை செய்த சாமியாரை ஆறே மணி நேரத்தில் கைது செய்து அசத்தியுள்ளது காரைக்குடி துணைச்சரக காவல்துறை.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பாப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவிற்காக வரும் செவ்வாய்க்கிழமையன்று மாநில ஆளுநர் வருகை தரும் நிலையில், அவருக்காக காரைக்குடியில் பாதுகாப்பை பலப்படுத்தி கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த காரைக்குடி துணைச்சரகப் போலீசாருக்கு அவ்வளவு எளிதாக பொழுது புலரவில்லை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே அலறிய தொலைபேசியால் காரைக்குடி தந்தை பெரியார் 4 வது வீதியிலுள்ள ஒரு வீட்டின் முன் ஆஜரான காரைக்குடி டி.எஸ்.பி.அருண், வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தினேஷ் உள்ளிட்டபோலீசாரை மொட்டை மாடியில் குப்புற கிடந்த பிணம் தான் வரவேற்றியிருக்கிறது. 

 

incident in sivakangai

 

கொலையுண்டு கிடந்தது வெளிநாட்டிலிருந்து திரும்பிய மணிமுத்து என்றும், வீட்டினுள் அவரது மனைவி பூமதி மற்றும் அவரது குழந்தைகள் பிரவீனா (20), கமலக்கண்ணன் (19), சஞ்சய் அரவிந்த் (17) இருப்பதும் தெரியவந்தது. கொலைக்கானக் காரணம், கொலையாளி யார் என போலீசார் தடயங்களை ஆய்வு செய்துக் கொண்டிருக்கையில், கொலையாளிக்கு சாதகமாக மழையும் அழுத்தமாக பெய்து தடயத்தைத் தேடுவதில் சிரமத்தை தந்தது. எனினும், விடாப்பிடியாக முன்னேறிய போலீசார் கொலைக்கானக் காரணம் தெரிந்து கொலையாளிகளை ஆறே மணி நேரத்தில் கைது செய்திருப்பது மக்கள் மத்தியில் நிம்மதியினை அளித்திருப்பது ஆறுதலான விடயமே.

 

incident in sivakangai


 "கொலையுண்ட நபர் மொட்டை மாடியில் உடலெங்கும் காயம்பட்டிருக்க அவரது மனைவி பூமதியின் அழுகையோ செயற்கைத் தனமாக இருந்தது. அது போக, " அவருக்கும் (மணி முத்துவிற்கும்) அவரது சகோதரி குடும்பத்திற்கும் சொத்துத் தகராறு உள்ளது. அவங்க தான் இந்த கொலையை செய்திருக்கனும் என அடிக்கடி கூறி வந்ததும் சந்தேகத்தை வலுவடைய செய்தது. இதனால் அந்தம்மாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து முறைப்படி விசாரிக்கையில், ராமேஸ்வரம் சாமியார் வேல்முருகன், கூட்டாளிகள் ராமநாதபுரம் பிரகாஷ் மற்றும் குமார் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததாக உண்மையை ஒத்துக்கொள்ள கொலையாளிகளான சாமியாரையும், பிரகாஷையும் கைது செய்து காரைக்குடிக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் கொலைக்குப் பயன்படுத்திய நிஸான் சன்னி காரும் (TN22-CU 8579) கைப்பற்றப்பட்டுள்ளன. தப்பியோடிய குமாரும் சிக்கும் பட்சத்தில் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களும் கிடைக்கும்." என்கின்றது காவல்துறை.

incident in sivakangai


 இதே வேளையில், தகவல் தொழில் நுட்பமும் காவல்துறைக்கு சரியான நேரத்தில் கைக் கொடுத்திருக்கின்றது. குறிப்பிட்ட  எண்ணிலிருந்து குறிப்பிட்ட எண்ணிற்கு நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பித்து ஏறக்குறைய 20 தடவைகள் தொடர்ச்சியாக அடிக்கடி தொடர்புக் கொள்ளப்பட்டது. அது போக, நடுநிசி 02.45க்கு வந்த தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு, மீண்டும் 03.15க்கு அதே எண்ணிற்கு அழைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்குரியவர்கள் சாமியார் வேல்முருகனும், பூமதியும் என்பது நிருபணமாக 02.45 டூ 03.15 எனும் இந்த இடைப்பட்ட வேளையில் தான் கொலை நடந்திருக்க முடியும் என கண்டறியப்பட்டதும் போலீசாருக்கு சாதகமே.

 

incident in sivakangai


 

விசாரணை அதிகாரிகளோ, " கொலையாளியான ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் திட்டக்குடிப் பகுதியினை சேர்ந்த சாமியார் வேல்முருகன் 15 ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் அருகிலுள்ள கூட்டுக்கொல்லை எனும் கிராமத்திற்கு புதையல் எடுத்து தருவதற்காக வந்துள்ளான். அப்பொழுது அங்கு வைத்து தான் மணிமுத்துவின் மனைவி பூமதிக்கும், சாமியாருக்கும் பழக்கம் உண்டானது. ஒருக்கட்டத்தில் பூமதியின் கணவர் மணிமுத்து வெளிநாட்டிலேயே பணிக்காக நிரந்தரமாக இருந்ததும், குழந்தைகளின் கல்விக்காக காரைக்குடியில் வசிக்கவுள்ளேன் எனக் கூறி காரைக்குடியில் தனியாக வீடு எடுத்து வசித்ததும் இருவருக்கும் சாதகமானது. எப்பொழுதாவது ஊருக்கு திரும்பும் மணிமுத்துவிற்கு பூமதியின் தகாத தொடர்பு தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரத்தில் திரும்பிய மணிமுத்துவிற்கு அரசல் புரசலாக விவகாரம் தெரியவர மனைவியைக் கண்டித்திருக்கின்றார். பூமதியோ தன்னுடைய காதலனான சாமியாரிடம் கூறி, கணவனின் கை காலை உடைக்க சொல்லியிருக்கின்றார்.

 

incident in sivakangai

 

ஆனால், இதுதான் தருணமென  அமாவாசை தினத்தில் நடுநிசி 1 மணிக்கு ராமநாதபுரம் அல்லிக்கண்மாயில் நிர்வாண பூஜையை நடத்திவிட்டு தன்னுடைய கூட்டாளிகளான பிணம் எரிக்கும் தொழிலாளியான பிரகாஷையும் அவனின் நண்பனான குமாரையும் தன்னுடைய காரிலேயே காரைக்குடிக்கு கூட்டி வந்து, அவர்களது துணையுடன் அதிகாலை 3 மணியளவில் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த மணிமுத்துவை அனைவரும் குத்திக் கொன்றிருக்கின்றனர். இவர்களின் கள்ளக்காதலால் உயிர்போனது ஒருபுறமிறக்க, அவர்களது குழந்தைகளின் நிலை தான் பரிதாபத்திற்குரியது" என்கின்றனர் அவர்கள். இதனால் இப்பகுதியில் பரப்பரப்புத் தொற்றியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.