Skip to main content

சேத்தியாத்தோப்பில் பெண் அடித்துகொலை? போலீசார் விசாரணை!

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வீரமுடையாநத்தம் கிராமம். இக்கிராமத்தில் ஜோதி(38) என்பவரின் மனைவி ரேவதி(33). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ரேவதியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் ஜோதி இதை ரேவதியின் தந்தை கண்ணனிடம் முறையிட்டுள்ளார்.

 

incident in Sathyathorp? Police are investigating!

 

பின் ரேவதியை தான் விசாரிக்கிறேன் என கண்ணன் தன் மகளை நேற்று சுமார் 12 மணியளவில் ஒரு காரில் வீரமுடையாநத்தம் கிராமத்திலிருந்து அழைத்து சென்றதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். பிறகு மாலையில் வீட்டிற்கு காரில் திரும்பிய கண்ணன் தனது மகள் இறந்து விட்டதாகவும், திடிரென்று இறந்துவிட்டார் என்றும் கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த வீரமுடையாநத்தம் கிராமமக்கள் சேத்தியாத்தோப்பு  காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்மமான முறையில் இறந்த ரேவதியின் தந்தையை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணையில் முக்கிய அரசியல் கட்சியில் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த ஜாதியின் பேரில் இறந்து போன அந்த பெண்ணுக்கும் அதே ஊரை சேர்ந்த வயது குறைவாகவுள்ள வாலிபருடன் தொடர்பு உள்ளது என்று கட்டபஞ்சாயத்து செய்து அந்த பெண்ணின் அப்பாவின் கண்முண்னே கடுமையாக அடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் அந்த பெண் இறந்ததை பெண்ணின் அப்பா கண்ணன் மறைத்து ஊருக்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய முயற்சித்தபோது பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். கட்டபஞ்சாயத்து செய்தவரை இரண்டாவது குற்றவாளியாக வழக்குபதிவு செய்யப்பட்டு போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.