Published on 07/10/2020 | Edited on 07/10/2020

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அவ்வப்போது வனப்பகுதியிலிருந்து சாலையில் காட்டு யானைகள் உலாவி வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று சத்தியமங்கலம் வனப்பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவர் காட்டுயானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக உறவினர்களுடன் காட்டுக்கோவிலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த 13 வயது சிறுவன் ஜடைசாமியைக் காட்டுயானை தாக்கி உள்ளது. இதனால் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காட்டு யானை தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.