Skip to main content

பேருந்து நடத்துநர் கழுத்தை நெரித்து கொலை! ; தீர்த்துக் கட்டிய காதலி!!

Published on 13/06/2021 | Edited on 13/06/2021

 

incident in salem... police investigation

 

சேலம் அருகே, ஆண் நண்பர்களுடன் பழகுவதை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த காதலி, வாழ்க்கைக் கொடுத்தவரையே கழுத்தை நெரித்துத் தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலத்தை அடுத்துள்ள மல்லமூப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (49). தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை செய்து வந்தார். இவர், 28 ஆண்டுக்கு முன்பு புஷ்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 27 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கடந்த 20 ஆண்டுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து, தளவாய்ப்பட்டியில் தனியாக வசித்து வந்தார்.

 

இவரும், தளவாய்ப்பட்டியைச் சேர்ந்த சித்ரா என்பவரின் மகள் உமா மகேஸ்வரி (35) என்பவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். நாளடைவில் நெருக்கம் அதிகமாகவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். உமாமகேஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து சில ஆண்டாக தாயார் வீட்டில் வசித்து வந்த நிலையில்தான் சுப்ரமணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 11) இரவு சுப்ரமணி தனது வீட்டில் உள்ள கட்டிலில் பேச்சுமூச்சின்றி கிடப்பதாக அவருடைய உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உறவினர்கள் சென்று பார்த்தபோது சுப்ரமணி கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து இரும்பாலை காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

முதல்கட்ட விசாரணையில், சுப்ரமணி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சுப்ரமணி வீட்டுக்கு வெள்ளிக்கிழமையன்று இரவு உமாமகேஸ்வரி, 2 ஆண்களை அழைத்து வந்திருக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதைத் தொடர்ந்து உமா மகேஸ்வரியை பிடித்து காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

 

குடும்ப வாழ்க்கையில் பரஸ்பரம் தோல்வி கண்டிருந்த உமாமகேஸ்வரியும்,  சுப்ரமணியும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். அதன்பிறகு ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் உமா மகேஸ்வரிக்கு வேறு சில ஆண்களுடனும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. வேலைக்காக வெளியே சென்ற நேரங்களில் உமா மகேஸ்வரி, சில ஆண்களை வீட்டுக்கே வரவழைத்து நெருக்கமாக இருந்துள்ளார். இதையறிந்த சுப்ரமணி, அவரை பலமுறை கண்டித்திருக்கிறார்.

 

இதை கொஞ்சமும் ரசிக்காத உமா மகேஸ்வரி, இனியும் சுப்ரமணி உயிரோடு இருந்தால், தான் நினைத்தபடி மற்ற ஆண்களுடன் சந்தோஷமாக பழக முடியாது என முடிவெடுத்துள்ளார். இதையடுத்து உமாமகேஸ்வரி, அவருடைய ஆண் நண்பர்களான செங்காட்டூரைச் சேர்ந்த நாகராஜன், கண்ணன் ஆகியோர் மூலம் சுப்ரமணியை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டார். இத்திட்டத்துக்கு அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

 

அதன்படி, ஜூன் 11ம் தேதி இரவு அவர்கள் இருவரையும் வீட்டுக்கு வரவழைத்தார். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுப்ரமணியின் கை, கால்களை ஆண் நண்பர்கள் இறுக்கிப் பிடித்துக்கொள்ள, உமாமகேஸ்வரி சுப்ரமணியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

 

கொலை திட்டத்தை நிறைவேற்றியதும் ஆண் நண்பர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். ஆனால் உமா மகேஸ்வரி எதுவும் தெரியாததுபோல் அங்கே இருந்துள்ளார். பின்னர் அவரே தன் கணவர் மூச்சு பேச்சின்றி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் அளித்திருப்பது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

தலைமறைவான உமா மகேஸ்வரியின் ஆண் நண்பர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.