Skip to main content

சேலம்: கொலை முயற்சி, வழிப்பறி ரவுடிக்கு குண்டாஸ்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020
salem



சேலத்தில், கொலை முயற்சி, வழிப்பறி குற்றங்களில் தொடர்புடைய ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


சேலம் சித்தனூரை சேர்ந்தவர் மாலிக் பாஷா. இவர் கடந்த மே 15ம் தேதி, ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள ஜீவா சிலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், 2800 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வழிப்பறி செய்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். மாலிக் பாஷா கூச்சல் போட்டதால் அவரை கை, கால்களில் கத்தியால் கிழித்து காயம் ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்றிருந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மாலிக்கிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர், ஜாகீர் அம்மாபாளையம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜா மகன் சரவணன் என்கிற சரவணராஜா (35) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், சேலம் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

 

 


இவர் மீது ஏற்கனவே, கடந்த 2019ம் ஆண்டு பிப். 8ம் தேதியன்று, சுப்ரமணிய நகரை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரை முன்விரோதத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கு, 31.5.2015ம் தேதி ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த மதியழகன் என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டியதில் அவர் தராமல் போகவே, அவரை காதில் கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்திய வழக்கிலும் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு வழக்கிலும் கைது ஆகி சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தபிறகு மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.

பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததோடு, தொடர்ந்து குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி, ரவுடி சரவணன் என்கிற சரவணராஜாவை காவல்துறையினர் செவ்வாயன்று (ஜூன் 2) குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். கைது ஆணை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரவணனிடம் புதன்கிழமை நேரில் சார்வு செய்யப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.