Skip to main content

சேலம் காதல் ஜோடி தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

சேலத்தில், சயனைடு கலந்த சாக்லெட்டை தின்று இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சேலம் செவ்வாய்ப்பேட்டை சாய்பாபா தெருவைச் சேர்ந்தவர் கோபி. வெள்ளிப்பட்டறை அதிபர். இவருடைய மகன் சுரேஷ் (22). பிளஸ்-2 முடித்துவிட்டு, அப்பாவுடன் இணைந்து வெள்ளித்தொழிலை கவனித்து வந்தார்.


 

incident in salem

 

கடந்த அக். 8ம் தேதியன்று மதியம் ஒரு மணியளவில், வெளியே சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பிய சுரேஷ், அதன்பின் வீடு திரும்பவில்லை. வழக்கமாக எங்கே சென்றாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார் என்பதால், மகன் வராதது குறித்து பெற்றோர் பதற்றம் அடைந்தனர். அவருடைய செல்போனுக்கு தொடர்ந்து முயற்சித்தபோது அணைத்து வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வரவே, உடனடியாக நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் தேட ஆரம்பித்து விட்டனர்.


இந்த நிலையில்தான் அன்று இரவு 11 மணியளவில், குகை ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே கோபிக்குச் சொந்தமாக உள்ள கார் ஷெட் முன்பு சுரேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் நிற்பது தெரிய வந்தது. கார் ஷெட்டின் கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்டு இருந்ததால், கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.  


அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் பின் இருக்கையில் சுரேஷூம், அவர் அருகில் ஓர் இளம்பெண்ணும் வாயில் ரத்தமும், நுரையும் வெளியேறியபடி, அமர்ந்த நிலையில் சடலமாகக் கிடந்தனர். அவர்கள் இருவருமே அரைகுறை ஆடையில் கிடந்தனர். இதைக் கண்டு சுரேஷின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரின் ஏசி இயங்கிய நிலையில் இருந்தது.


இந்த சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளர் சுந்தராம்பாள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். முதல்கட்ட விசாரணையில், சுரேஷூடன் இறந்து கிடந்தது, குகை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ஜோதிகா (20) என்பதும், இருவரும் காதலர்கள் என்பதும், சாக்லெட்டில் சயனைடை கலந்து தின்று தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. இருவரும் தொடர்ச்சியாக தினமும் செல்போனில் பல மணி நேரம் பேசி காதலை வளர்த்து வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

 

incident in salem



காதல் ஜோடி இருவருமே சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், சுரேஷின் பெற்றோர் அளவுக்கு ஜோதிகாவின் குடும்பம் பொருளாதார வசதி கொண்டது இல்லை. மேலும், 'படிக்கிற வயதில் காதல் எதற்கு? படிப்பை முடி; பிறகு பார்க்கலாம்' என்று கூறி, ஜோதிகாவின் பெற்றோர் அவருடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


சில மாதங்களுக்கு முன்பு, ஜோதிகாவின் செல்போனுக்கு சுரேஷ் அனுப்பிய குறுந்தகவல் மூலமாகத்தான் மகளின் காதல் விவகாரம் அவருடைய பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. சுரேஷை பார்க்கவோ, பேசவோ கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இதற்கிடையே ஜோதிகாவுக்கு அவருடைய பெற்றோர், மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வந்த ஜோதிகாவுக்கு படிப்பை முடிப்பதற்கு முன்பே திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்பதிலும் குறியாக இருந்துள்ளனர்.


 

incident in salem

 

இதையெல்லாம் சுரேஷிடம் சொல்லி அழுது புலம்பியுள்ளார் ஜோதிகா. இதனால் எங்கே தாங்கள் நினைத்தபடி காதல் கைகூடாமல் போய்விடுமோ என்று கருதிய காதலர்கள், தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்து, வெள்ளித்தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைடை சாக்லெட்டில் கலந்து தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கு முன்பு, அவர்கள் கலவியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


எனினும், தற்கொலை தொடர்பாக அவர்கள் ஏதாவது முன்கூட்டியே கடிதம் ஏதாவது எழுதி வைத்திருக்கிறார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இருவரின் சடலங்கள் குறித்த உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட விஷத்தின் தன்மை, அளவு, தற்கொலைக்கு முன்பு புணர்ச்சியில் ஈடுபட்டார்களா என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும் என்கிறது காவல்துறை.

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.