Skip to main content

ரூ.10 ஆயிரத்திற்காக இளைஞர் கொலை... அச்சத்தில் தேவக்கோட்டை!

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

வெகு சாதாரண பிரச்சனைக்களுக்கெல்லாம் கொலைதான் தீர்வு என்பது தமிழகத்தில் பல கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. அதில், ஓசி டீ தரவில்லையென்பதால் டீக்கடைக்காரர் வெட்டிக் சாய்க்கப்பட்ட மதுரை சம்பவம், அமைதியாக செல்லுங்கள் என தூத்துக்குடியில் பைக் ரைடர்களை கண்டித்ததால் நடந்த இரட்டைக் கொலை சம்பவம். இந்த வரிசையில், புதியதாக இணைந்திருக்கின்றது தேவக்கோட்டையில் கொடுத்த கடனைக் கேட்ட இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

 

incident for Rs 10 thousand ... Devakottai in fear!

 

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவமணி அய்யப்பன். பங்கு வர்த்தகம், ஆன் லைன் வர்த்தகம் மற்றும் கொடுக்கல் வாங்கல் உட்பட தொழில் செய்து வந்திருக்கின்றார். சம்பவத்தினமான நேற்று இரவில் நண்பர்களுடன் சேர்ந்து திருப்புத்தூர் சாலையில் லட்சுமி தியேட்டர் எதிரிலுள்ள உணவகத்திற்கு உணவருந்த சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே இவருக்காகக் காத்திருந்த வெங்களூர் வினோத் கையில் வைத்திருந்த பட்டாக் கத்தியால் சிவமணி அய்யப்பன் தலையில் வெட்ட, சம்பவ இடத்திலேயே துடித்துடித்து இறந்தார் அவர். வழக்கம்போல் தாமதாக வந்த காவல்துறையும், இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் மற்றும் எஸ்.ஐ. மருது ஆகிய இருவரை தலைமையாகக் கொண்டு இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடி வருகின்றது.

 

incident for Rs 10 thousand ... Devakottai in fear!


காவல்துறையோ தனது முதற்கட்ட தகவலில்., " அருணகிரி பட்டணம் பகுதியிலுள்ள சிவன்கோவிலில் வைத்துத் தான் வெங்களூர் வினோத்திற்கும், கொலையுண்ட சிவமணி அய்யப்பனிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் நெருங்கிய நட்பாக வினோத்தைக் கொண்டு கொடுக்கல் வாங்கல் தொழிலை செய்து வந்திருக்கின்றார் சிவமணி அய்யப்பன். ஒருக்கட்டத்தில் வினோத்தும் தன்னுடைய தேவைக்கு ரூ.10 ஆயிரத்தைக் கடனாகப் பெற்றிருக்கின்றார். கொடுத்தக் கடனை திருப்பிக் கேட்கவே, " எப்படி நீ என்னிடமே ரூபாயைக் கேட்கலாம்..? உனக்காகத் தானே வரவு செலவுப் பார்த்தேன்.? என வாக்குவாதம் முற்றத் தொடங்கியுள்ளது இருவருக்கும். அவ்வேளையில் அங்கு வந்த சிவமணி அய்யப்பனின் அண்ணன் கணேசனும் தம்பிக்கு சாதகமாக பேச, கணேசனைப் பதம் பார்த்தது வினோத்தின் பட்டாக்கத்தி. இது கடந்த வருடம் 11ம் நடந்த சம்பவம். இது பொருட்டு வழக்கு நடந்து வந்த வேளையில் நேற்றிரவு சிவமணி அய்யப்பனை சராமரியாக வெட்டிக் கொன்றுள்ளார் வினோத்." என்கின்றது. வெறும் ரூ.10 ஆயிரத்திற்காக இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தேவக்கோட்டையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.