Advertisment

இரு சிறுமிகளுக்கு 10-க்கும் மேற்பட்டோரால் தொடர் பாலியல் வன்கொடுமை!-விசாரணையில் அதிர்ச்சி!! 

INCIDENT IN RASIPURAM

ராசிபுரத்தில் 12,13 வயது மதிக்கத்தக்க சிறுமிகள்முதியவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்டோர்தொடர்ந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள ஒரு கிராமத்தின்ஒதுக்குப்புறத்தில் இருந்த வீட்டில் தனதுதாயுடன் வசித்து வந்த 12 மற்றும் 13 வயது மதிக்கத்தக்க சிறுமிகள்இருவர்75 வயது மதிக்கத்தக்க முதியவரால்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. தந்தை இல்லாத சூழலில் தாய் பகல் மற்றும் இரவு வேளைகளில் வேலைக்கு செல்லும் நிலையில் குடும்பம்இருக்கும் நிலையில், தாய் இல்லாத நேரத்தில் தங்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், வெளியே கூறினால் கொன்றுவிடுவோம் என மிரட்டியதாகவும் சிறுமிகள்அக்கம்பக்கத்தினரிடம் கூற,அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள் இதுதொடர்பான புகாரை குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல்தெரிவித்திருந்தனர்.

Advertisment

குழந்தைகள் நல அமைப்புசார்பில்அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 75 வயது மதிக்கத்தக்க அவர் முத்துசாமி கைது செய்யப்பட்டார். அதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணைக்கு பின்இளைஞர்கள், முதியவர்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்தில்10க்கும் மேற்பட்டோர் தொடர்ச்சியாக சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும்சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் ராசிபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகளாக இருக்கக்கூடிய சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

namakkal police rasipuram Sexual Abuse
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe