மனைவி இறந்த துக்கம் தாளாமல் கழுத்தை அறுத்து கொண்ட கணவர்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பையா ( வயது 50) அவரது மனைவி கருப்பாயி (வயது 45).

incident in pudukottai

கருப்பாயி கடந்த சில நாட்களாக மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மனைவியின் உயிரைக் காப்பாற்ற கணவர் பல வழிகளிலும் முயற்சித்தார். ஆனால் நேற்று கருப்பாயி உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை கருப்பாயி உயிரிழந்தார்.

incident in pudukottai

இதையடுத்து மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாத கணவன் சுப்பையா தன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுதை அறுத்துக் கொண்டுள்ளார். இதைப்பார்த்த அவரது மகன் பதறி தடுத்ததுடன் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கும்தகவல் கொடுத்துள்ளார்.அதன்பின் பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட சுப்பையாசிகிச்சை பெற்று வருகிறார்.

death humanity husband love wife
இதையும் படியுங்கள்
Subscribe