Skip to main content

10 மாதமாகச் சம்பளம் இல்லை... மனஉளைச்சலில் ஊராட்சி செயலர் விஷம் குடித்துத் தற்கொலை!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

incident in pudukottai thiruvarangluam

 

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் மாங்காடு கிராத்தைச் சேர்ந்தவர் முழுகேசன். இவருக்கு மனைவி மற்றும் 5, 3 வயதுகளில் ஆண் குழந்தைகள் உள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு ஊராட்சி செயலராகப் பணியில் சேர்ந்தார். அரயப்பட்டி ஊராட்சியில் சில வருடங்களுக்கு முன்பு பணியில் இருந்தபோது இடமாறுதல் கிடைக்கவில்லை என்று தற்கொலைக்கு முயன்று சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டார்.

அதன் பிறகு புளிச்சங்காடு அண்ணாநகர் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்து கொண்டு பள்ளத்திவிடுதி ஊராட்சி செயலராகத் தற்போது வரை பணியாற்றி வந்தார். அங்கு ஊராட்சிக்கு ரூ.8 ஆயிரம் வரை பணம் செலுத்த வேண்டியுள்ளது. அந்தப் பணம் அலுவலகத்தில் செலுத்தப்படாத நிலையில் அவருக்குக் கடந்த 10 மாதங்களாகச் சம்பளம் கொடுக்கப்படவில்லை. அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு செலவுக்கே வழியின்றி தவித்து வருவதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்கள் வாட்ஸ் அப் குழுவில் வேதனையைப் பகிர்ந்துள்ளார். சம்பளம் இல்லாததால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் கடந்த ஒரு மாதமாக ஊராட்சி வேலைக்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

 

incident in pudukottai thiruvarangluam


இந்நிலையில் இன்று தஞ்சாவூர் மாவட்டம் செருவாவிடுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்குச் சென்றவர் மதியம் ஒரு படம் மற்றும் பதிவு ஒன்றை நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க முடியவில்லை. வீட்டுச் செலவுகளையும் சமாளிக்க முடியவில்லை. அதனால் கடும் மனஉளைச்சலில் இருப்பதால் மதுவில் விஷம் கலந்து குடிக்க போகிறேன் என்று பதிவிட்டு மதுவில் விஷம் கலந்த படத்தையும் அனுப்பிவிட்டு செல்ஃபோனை சுவிட்ஸ் ஆஃப் செய்துவிட்டார். அந்தப் பதிவைப் பார்த்த நண்பர்கள் அவரை நீண்டநேரம் தேடி சிகிச்சைக்காக தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

சம்பளம் இல்லை என்ற மனஉளைச்சலில் இருந்து குடும்பதைக் காப்பாற்ற முடியவில்லை என்ற விரக்த்தியி்ல மதுவில் விஷம் கலந்துத் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி செயலர் முருகேசன் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்குவதுடன் அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று அவரது நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.