Skip to main content

பிரதமர் உரைக்கு உயிர் கொடுத்த மாணவன்... உயிரை பறித்த தண்ணீர்... கதறி அழும் கிராமம்!

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் கிராமத்தில் வசிக்கும் மேரி அந்தோணிசாமி மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 14) மங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

பாரதப் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை பள்ளியிலும் தான் வசிக்கும் தெருவிலும் மட்டுமின்றி அவன் செல்லும் இடமெங்கும் செயல்படுத்தினான். அவன் செல்லும் வழியில் ஒரு குப்பை கிடந்தாலும் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு செல்லும் மாணவன் சக நண்பர்களிடம் வானொலியில பிரதமர் பேசினதை கேட்டேன் நாம வசிக்கும் இடத்தை நாம தூய்மையா வச்சுகிட்டா நம்மை சுற்றி குப்பைகள் வராதுனு பேசினார். நம்ம எல்லாரும் சேர்ந்து செஞ்சா ஊரையே சுத்தமா வச்சுக்கலாம் என்று பேசுவான். அவனது பொழுது போக்கு வானொலி கேட்பதாக இருந்தது.

 

incident in pudukottai.... school student


இப்படி தூய்மை இந்தியாவின் ஒரு சிறந்த மாணவனாக இருந்தவன்.. இன்று மங்கனூர் பெரியகுளத்தில் சக நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, குளத்தில் மழைத்தண்ணீர் முழுமையாக நிரம்பி இருப்பதால் நீண்ட நாட்களாக மழையையும் தண்ணீர் நிரம்பிய குளத்தையும் பார்த்திராத மகிழ்ச்சியில் குளத்தின் மையத்திற்கு சென்றவனால் திரும்பி கரைக்கு வரமுடியவில்லை மூச்சுத்திணறல் ஏற்பட்டு , சகதியில் சிக்கினார்.  சக நண்பர்களும் அவனை மீட்க போராடியுள்ளனர் முடியவில்லை.

அதன் பிறகு  நீச்சல் தெரிந்த கிராம மக்கள் நீரில் சிக்கிய மாணவரை தண்ணீரிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.நிலை தடுமாறி விழுந்த மாணவரை மீண்டும் உயிர்ப்பிக்க அங்கிருந்தவர்கள் வயிற்றில் இருந்து நீரை அகற்றி முதலுதவி செய்தும் பயனில்லை. உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவரின் தந்தை எந்த கெட்ட பழக்கும் இல்லை என்றாலும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். குடும்ப சூழ்நிலையால் தாய் ஒருவரால் குடும்பத்தை ஓட்ட முடியாது என்பதால் அண்ணன் ஆரோக்கியராஜ் ப்ளஸ் 2 முடித்த கையோடு ஜவுளிக்கடைக்கு வேலைக்கு போய்விட்டார். தம்பி நல்லா படிக்கிறான் அவனை படிக்க வைப்போம் என்று அண்ணன் படிப்பை துறந்தார். இந்த நிலையில்தான் இந்த மாணவரின் இறப்பு, அவரது குடும்பத்தை மட்டுமின்றி அந்த தெருவையே நிலை தடுமாற வைத்துள்ளது.

இது குறித்து அவரது பள்ளித் தலைமையாசிரியர் காவேரியம்மாள் கூறியதாவது,

பள்ளி வளாகத்தை தூய்மையாக வைப்பதிலும்,பள்ளியில் சக மாணவர்களுக்கு உதவுவதிலும் முன்னோடியாகவும்  நல்ல ஒழுக்கமுள்ள மாணவனாகவும் இருந்தான்.தனிப்பட்ட முறையில் அனைத்து ஆளுமைகளும் உள்ள ஒரு சிறந்த நிர்வாகியாக வர வேண்டியவன் இப்படி இறந்து விட்டான் என்ற செய்தி எனக்கு பேரிடியாக உள்ளது என்கிறார்.

இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாமுண்டி கூறியதாவது, பொது நலம் மிக்க இந்த மாணவர் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை திறம்பட செய்ததுடன் மற்றவர்களையும் கடைப்பிடிக்க தூண்டுகோலாக இருந்தார். அப்படியான மகனை இழந்து தவிக்கும்  குடும்பத்திற்கு உடனடியாக மத்திய மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும் என்றார்.

அதேபோல அந்த மாணவன் வசித்த தெருவைச் சேர்ந்த ஜெய்சங்கர்.. வயதில் சிறுவனாகாஇருந்தாலும் அறிவும் ஆற்றலும் அதிகம். எப்எம் ரோடியோ கேட்பான். அப்படி ஒரு நாள் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா உரையை கேட்டவன் அடுத்த நாள் பள்ளிக்கு செல்லும் போதே தெருவில் கிடந்த தகுப்பைகளை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு சென்றான். புதர்களாக இருந்தால் புல்லை அகற்றுவான். பள்ளியிலும் அப்படித் தான். அவன் செல்லும் இடங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பான். அடுத்தவர்களையும் அதை செய்ய வலியுறுத்தி எங்கள் கிராமத்திற்கு தூய்மையின் வழிகாட்டியாகாயிருந்த சிறுவனை இப்படி பலி கொடுத்துவிட்டோம். சில மாதங்களில் இரு உயிர்களை பறிகொடுத்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு மத்திய அரசு உதவி கிடைத்தால் நல்லது என்றார்.

தூய்மையை வலியுத்தி புரட்சியை செய்த ஸ்டீபன்ராஜ் பிரேதப் பரிசோதனைக்காக  பிணவறையில் அமைதியாக கிடக்கிறான். அரசுகள் முடிவெடுக்கட்டும் அந்த புரட்சிக்காரன் குடும்பம் வாழ...

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.