incident in pudukottai

புதுக்கோட்டை, ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியைமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

incident in pudukottai

Advertisment

ஏம்பல் கிராம மக்கள் ஒன்று கூடி கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும், ஒன்றுக்குமேற்பட்டவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும், அவர்களையும் கைது செய்ய வேண்டும், மேலும் வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தி, விரைவில் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் கிராம மக்கள் முன்வைத்தனர்.இந்நிலையில் சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியைமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.