Skip to main content

மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து சிறுமி, மூதாட்டி இறப்பு!

Published on 05/12/2020 | Edited on 06/12/2020

 

incident in pantruti

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். நேற்று முன்தினம் இரவு, அவரது மகள் சஞ்சனா (வயது 10) மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இரவு விடாது பெய்த கனமழையின் காரணமாக அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த சிறுமி சஞ்சனா படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாகச் சிறுமி உயிரிழந்துள்ளார்.

 

இதேபோல், பண்ருட்டி அருகே உள்ள பெரியகாட்டுப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி தனமயில் (வயது 55) இவர் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மழையின் காரணமாக, வீட்டுச் சுவர் இடிந்து தனமயில் மீது விழுந்தது. இதனால், மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேபோல் தொரப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ரங்கநாதன் என்பவர் வீடும் இடிந்து விழுந்துள்ளது.

 

திட்டக்குடி அருகே உள்ள இடைச்செருவாய்க் கிராமத்தில் மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில், அங்கு கட்டப்பட்டிருந்த ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன. இப்படி, கடலூர் மாவட்டத்தில் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களையும், ஆடு, மாடுகளையும், வீடுகளையும் கணக்கெடுக்கும் பணி வருவாய்த்துறை மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதற்கான நிவாரணத் தொகையை, விரைவில் அரசு வழங்கும் என்று பாதிப்புக்குள்ளான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.