Skip to main content

மனநலம் பாதித்த மகள்களால் கொலை செய்யப்பட்ட தாய்... பாளையங்கோட்டையில் பரபரப்பு!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

 incident in Palayankottai... police investigation

 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு மகள்கள் தாயை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் கோயில் பிச்சை. இவரது மனைவி உஷா (50). இந்த தம்பதிக்கு நீனா (23), ரீனா (20) என்ற இரு மகள்கள் உள்ளனர். கோயில் பிச்சை மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டைவிட்டுச் சென்ற நிலையில், உஷா அவரது மகள்களுடன் கே.டி.சி நகரில் வசித்துவந்தார். ஹிந்தி டியூசன் எடுத்துவந்த உஷா, அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை சமாளித்து வந்துள்ளார். உஷாவின் மகள்களான நீனாவும், ரீனாவும் பட்டப்படிப்பு முடித்தவர்கள்.

 

 incident in Palayankottai... police investigation

 

சில நாட்களுக்கு முன்பு நீனா, ரீனா இருவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (20.07.2021) காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது, உஷா ரத்த வெள்ளத்தில் கொலையாகி கிடந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கதவை உடைத்து உள்ளே சென்றபோது உஷாவின் மகள்கள் நீனா, ரீனா கைகளில் ரத்த கறை இருந்தது. மகள்கள் இருவரும் தாய் உஷாவை கம்பு மற்றும் கத்தியைக் கொண்டு தாக்கி, கொலை செய்தது தெரியவந்தது. தாங்கள்தான் அம்மாவைக் கொன்றதாக இருவரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களை வெளியே அழைத்தபோது வெளியே வர மறுக்க, ஒருவழியாக பேசி, சமாதானப்படுத்தி இருவரும் வெளியே கொண்டுவரப்பட்டனர்.

 

இருவரும் தாயைக் கொன்றுவிட்டு பொம்மை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். அதேபோல் போலீசார் கூட்டி செல்கையில் மூத்த மகளான நீனா, தங்கைக்குப் பிஸ்கட் ஊட்டியுள்ளார். இந்த அளவிற்கு இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவரையும் மனநல சிகிச்சைக்காக போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தாய் உஷாவின் உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்குப் போலீசார் அனுப்பிவைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட மகள்களால் தாய் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.