ADVERTISEMENT

அண்ணன் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்த தம்பி! அண்ணனின் முடிவால் நேர்ந்த சோகம்!

07:57 PM Nov 21, 2020 | kalaimohan

ADVERTISEMENT

மதுரையில், அண்ணன் காதலித்த பெண்ணை தம்பி திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த அண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியைச் சேர்ந்த சல்லிகோடாங்கிப்பட்டியில் வசித்து வந்தவர் பெரியகருப்பன். டிப்ளமோ படித்திருக்கும் பெரியகருப்பன் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் மேற்பார்வையாளராகப் பணிசெய்து வந்தார். பெரியகருப்பனின் தம்பியான சின்னகருப்பன் அதே ஊரில் மைக்செட் ஆப்ரேட்டராகப் பணிசெய்து வந்தார்.

ADVERTISEMENT


இந்நிலையில், பக்கத்துக்கு ஊரான பொய்கைகரைபட்டியில் 16 வயது சிறுமி ஒருவரை பெரியகருப்பன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவரைத்தான் தான் திருமணம் செய்துகொள்ளப்போதகவும் பெரியகருப்பன் அடிக்கடி கூறிவந்துள்ளார். இப்படி இருக்க, மைக்செட் ஆபரேட்டரான சின்னகருப்பன் அந்தச் சிறுமியிடம் பேசிப் பழகி காதலித்துள்ளார். சிறுமியும் சின்னகருப்பனையே காதலித்ததாகக் கூறப்படுகிற நிலையில், வீட்டில் எதிர்ப்பு கிளம்ப, வீட்டை விட்டு வெளியேறி சின்னகருப்பனும் அந்தச் சிறுமியும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், தான் காதலித்த பெண்ணை தம்பி திருமணம் செய்துகொண்டதை அறிந்த அண்ணன் பெரியகருப்பன் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தன்னால் அண்ணன் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த சின்னகருப்பனும் அவருடைய காதலியான அந்தப் பெண்ணும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில், இவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அண்ணன் காதலித்த பெண்ணை தம்பி திருமணம் செய்துகொண்டதால் அண்ணன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT