Skip to main content

டிக் டாக் கணவன், டிக் டாக் காதலியுடன் மாயம்... வீடு, நகைகளைப் பறிகொடுத்த மனைவி வீதியில்!!

Published on 15/07/2020 | Edited on 16/07/2020

 

incident in nellai

 

நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். அடிப்படையில் டெய்லர் வேலை பார்ப்பவர். சென்னையில் இருந்திருக்கிறார். இவரது உறவுக்காரரான பிச்சமுத்து குடும்பத்துடன் மும்பையில் வசிப்பவர். உறவு விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக அவரின் மகள் ஜாய்சி தன்னைவிட நான்கு வயது மூத்தவள் என்றாலும் அவரை 2008 ஆம் ஆண்டு சுப்புராஜூக்கு திருமணம் முடித்தார். ஆனால் ஜாய்சிக்கோ இந்தி, மராத்தி, ஆங்கிலம் நன்றாக பேச எழுத முடியும், தமிழ் பேச மட்டுமே தெரியுமாம். ஜாய்ச்சிக்கு அவரது பெற்றோர், நகைகள், ரொக்கம் என்று நல்லபடியாகவே வரதட்சணை கொடுத்தே அனுப்பியுள்ளனர். தம்பதியர் சென்னையில் வசித்தனர். அவர்களுக்கு 11 வயதில் மகளும், 8 வயது மகனும் என்று இரண்டு பேர்.

 

கடந்த சில வருடங்களுக்கு முன்னர்தான் சென்னையை விட்டு தங்களின் சொந்த ஊரான வீரவநல்லூருக்கு மனைவி பிள்ளைகளுடன் குடிபெயர்ந்த சுப்புராஜ் அங்கே தன் மனைவியின் பூர்வீக வீட்டிலேயே குடியேறினர். கணவன் சுப்புராஜ் வீரவநல்லூரில் ஆக்டிங் டிரைவாக வேலைக்கு செல்ல மனைவி ஜாய்சி வீட்டிலிருந்தவாறு டெய்லரிங் வேலையைச் செய்துள்ளார்.

 

இதனிடையே அண்டையிலிருக்கும் தெருவில் வசிக்கிற பிரேமா என்ற கணவனைப் பிரிந்த பெண்ணுடன் சுப்புராஜுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிரேமாவிற்கு தோள் வரை வளர்ந்த இரண்டு மகள்கள். தவிர இணைப் பழக்கமாக டிக் டாக் வீடியோ பதிவிடும் பழக்கம் வேறு சுப்புராஜிடம் ஒட்டியிருக்கிறது. இதைப் போன்றே டிக் டாக்கில் சினிமா பாடலுக்கு ஏற்றபடி நளினமாக நாட்டியமாடும் பழக்கம் பிரேமாவிற்கு இருந்திருக்கிறது. டிக் டாக்கில் ரொமாண்ட்டிக்கான வீடியோ பதிவிடுவதை இவர்கள் வாடிக்கையாக ஆக்கிக் கொண்டனர். பிரேமா, சுப்புராஜின் இந்த ரொமான்ஸ் நெருக்கம் பற்றி மனைவி ஜாய்சிக்குத் தெரியவர குடும்பத்தில் புயலடித்திருக்கிறது.

 

incident in nellai

 

இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான், மனைவி ஜாய்சியின் பெயரிலிருந்த வீட்டை தன் பெயருக்கு சூசகமாக எழுதி வாங்கியிருக்கிறார் சுப்புராஜ். தமிழ் தெரியாத தன்னை ஏமாற்றி எழுதி வாங்கப்பட்டதையும் அவரது முறையற்ற தொடர்பு பற்றியும் வீரவநல்லூர் போலீசில் புகார் செய்த ஜாய்சியை, கணவனோடு ஒத்துப் போகும்படி இருவரையும் சாமாதனப்படுத்தி அனுப்பிய போலீஸ், ஏமாற்றியது பற்றிய புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த விவகாரம் தொடர, ஜாய்சி கடந்த மே 22ல் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ய, கரோனாவை சாக்காக கொண்ட மகளிர் காவல் நிலையம், புகாரைக் கிடப்பில் வைத்துவிட்டது. இதனிடையே சுப்புராஜ் பிரேமாவுடன் கடந்த சில நாட்களுக்கு முன் ஜுட் விட, பதறிய ஜாய்சி, சந்தேகத்தில், தனது நகையைக் கணவன் கணக்கில் வங்கியில் அடகு வைக்கப்பட்டதை ஆவணங்களுடன் விசாரிக்க, அந்த நகைகளையும் எடுத்துக்கொண்டு காதலியோடு சுப்புராஜ் பறந்தது தெரியவர அதிர்ந்திருக்கிறார்.

 

வீடு, நகைகள் பறிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட ஜாய்சி, தனது குழந்தைகளுடன் வீதிக்கு வராத குறைதான். எனக்கு தமிழ் பேச தெரியும் எழுத்து தெரியாது. கணவனே என்னை ஏமாற்றி என் நகையையும், வீட்டையும் பறித்துக்கொண்டு ஒடியதை போலீசில் முறையிட்டும் பலனில்லையே என பரிதவிக்கிறார் ஜாய்சி. காவல் துறை, முறையான புகாரின் மீது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால், ஜாய்சி போன்ற பெண்ணுக்கு இந்த கதி ஏற்பட்டிருக்குமா?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

'எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனேஜர் என்றே தெரியாது'-மழுப்பிய நயினார் நாகேந்திரன்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டி ஏ-1 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

nn

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி என்பவர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மது பாட்டில்களும் சிக்கியதாக பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நயினார் நாகேந்திரன் தங்கும் ஹோட்டல் அறையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அவர் தங்கும் அறையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கு தொடர்புடைய வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டிலும் 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திமுகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரவர்கள் தொழிலுக்காக பணத்தை வைத்திருப்பார்கள். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனஜர் என்றே தெரியாது' என பதிலளித்துள்ளார்.