Skip to main content

பைக்கில் வேகமாகச் சென்றதைத் தட்டிக்கேட்டதால் வீடுகள் சூறை... நெல்லையில் பரபரப்பு!

Published on 29/11/2020 | Edited on 29/11/2020

 

நெல்லை மாவட்டத்தின் கூடன்குளம் அருகேயுள்ள செட்டிகுளம் புதுமனையின் இந்திரா காலனியைச் சேர்ந்த சகோதரர்கள் கதிரவன் சிவன்மணி. இருவரும் அங்குள்ள கோவிலின் முன்பாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியில் பைக்கில் இருவர் வேகமாகச் சென்றதைச் சகோதரர்கள் தட்டிக்கேட்டதால் அவர்களுக்குள் வாய்த்தகாராறு ஏற்பட்டு அடித்துக்கொண்டார்கள். உடனே அப்பகுதியினர் தலையிட்டு அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

 

பின்னர் பைக்கில் சென்றவர்கள் தங்களின் உறவினர்களிடம் விவகாரத்தைத் தெரியப்படுத்தி அவர்களை இந்திரா காலனிக்கு வரவழைத்தனர். அந்தக் கும்பல் காலனியிலுள்ள வீடுகளைக் கற்கள் கொண்டு தாக்கியதால் 10 வீடுகள் தேசமடைந்தன. அங்கு நின்றிருந்த 8 பைக்குகளையும் அடித்து நொறுக்கியவர்கள் சகோதரர்களான சிவன்மணி, கதிரவனையும் கடுமையாகத் தாக்கிவிட்டுத்த் தப்பியோடினர்.

 

இதையடுத்து சகோதரர்கள் சிகிச்சைக்காக கூடன்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படனர். இதனால் இரண்டு தரப்பிற்குமிடைய பதற்றச்சூழல் ஏற்பட்ட நேரத்தில், தாக்கியதுடன் வீடுகளை சேதப்படுத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திரா காலனி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்பாட்டுக்கு வந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப்படுத்தியதால் அவர்கள் கலைந்து சென்றனர். அங்கு பதற்றத்தைத் தணிக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

இதுகுறித்து கூடன்குளம் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா, 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்தார். மேலும், புதுமனைப் பகுதியைச் சேர்ந்த சிவராமன், சஞ்சய், பாலகிருஷ்ணன், ஹரிகிருஷ்ணன் உள்பட 4 பேரைக் கைது செய்தனர். அதனைக் கண்டித்து அவர்களின் உறவினர்கள் பொது மக்கள் நேற்று மாலை கூடங்குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். விசாரணையில் தகராறில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து முற்றுகை விலக்கப்பட்டது.

 

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட எஸ்.பி மணிவண்ணன் மோதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். இருதரப்பினரின் பதற்றத்தைத் தனிக்க வள்ளியூர் ஏ.எஸ்.பி. சமைசிங் மீனா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த சம்பவத்தால் சற்று பரபரப்பானது அந்தப்பகுதி. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.