Skip to main content

கூடுதல் வட்டி... கவர்ச்சித் திட்டங்கள்... 30 கோடி சுருட்டியவருக்கு சிறை! - பரிதாபத்தில் வாடிக்கையாளர்கள்!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

incident in nellai

 

'முறை தவறி பயணிக்கும், கவர்ச்சி அறிவிப்புகளை நம்பி மோசம் போகாதீர்கள்' என்று அரசும் காவல் துறையும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டாலும், பண ஆசையில் பிரகாச விளக்கில் விழுந்து மடியும் விட்டில் பூச்சிகளைப் போன்று மக்கள் ஏமாறுவது சகஜமாகி விட்டது. இதில் வேதனை என்னவெனில் பாமர மக்களைவிட படித்த மக்களே தங்களின் சேமிப்பை வீணாகத் தொலைத்து விட்டுக் கண்ணீரும் கம்பலையுமாக அலைவதுதான் பரிதாபம்.

நெல்லை ஜங்ஷன் பக்கமுள்ள பாலபாக்யா நகரைச் சேர்ந்த எடிசன், வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவரைப் போன்றே தென்காசி நகரின் குத்துக்கல் வலசையைச் சேர்ந்த மயில்வாகனனும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர். நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் இவர்கள் இருவருக்கும் தொழில் ரீதியாக நட்பு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகட்டு முன்பு மயில்வாகனன் நிதி நிறுவனம் ஆரம்பித்தவர், தனது நிதி நிறுவனம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் அல்லது அதிக வட்டி தருவதாக அறிவித்தவர், ஆடித் தள்ளுபடி போன்று கவர்ச்சித் திட்டங்களை அறிவித்தார் ஒரு லட்சம் டெபாசிட் செய்பவர்களுக்கு மாதம் தோறும் 8 ஆயிரம் வட்டி தரப்படும். வாடிக்கையாளர்கள் தங்களின் டெப்பாசிட் தொகையை எப்போது திரும்பப் பெறவேண்டும் என்று விரும்புகிறார்களோ, உடனே அணுகினால் இரண்டே நாளில் டெப்பாசிட் வாபஸ் என அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே வைத்துக் கொண்டார். இந்த நிதி நிதிநிறுவனத்தின் தலைமையத்தை, நெல்லை மற்றும் தென்காசியில் வைத்துக் கொண்டவர், வேறு சில மாவட்டங்களிலும் ஆரம்பித்தார். இந்தப் பகட்டான கவர்ச்சியான பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தை நம்பி பலர் விட்டில் பூச்சிகள் போன்று மொய்த்தனர்.

 

incident in nellai

 

ஒய்வு பெற்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், தனியார் நிறுவன மேலாளர்கள் மட்டுமல்லாமல் தொழிலதிபர்கள் கூட முந்திக் கொண்டு அடைமழையாய், லட்சம் முதல் கோடிகள் வரை டெபாசிட் செய்துள்ளனர். நல்ல பிள்ளை மாதிரி, டெபாசிட்தாரர்களுக்கு மாதம் தோறும் வட்டிப் பணத்தை வழங்கிவந்திருக்கிறார் மயில்வாகனன். இதனையறிந்த எடிசனும் தனது மற்றும் தனது உறவினர்கள் நண்பர்களிடமிருந்து சேகரித்த சுமார் 10 கோடி ரூபாய் வரை மயில்வாகனன் நிறுவனத்தில் கடந்த வருடம் டெபாசிட் செய்திருக்கிறார். அதற்குரிய வட்டிப் பணம் இரண்டு மாதம் மட்டுமே அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதன்பின், அவர்களுக்குப் பல மாதங்களாகவே வட்டிப் பணம் கிடைக்கவில்லையாம். இதனால் 150 வடிக்கையாளர்கள் கேட்டதற்கு சாக்குப் போக்கு சொல்லிக் கழித்திருக்கிறார் மயில்வாகனன்.

ஒருவர் டெபாசிட் பணத்தை அடுத்தவருக்கு வட்டியாகக் கொடுத்தது மாதிரி என்பதால், ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் கொடுக்க முடியாமல் போயிருக்கிறது. பணம்கிடைக்காமல் மனமுடைந்த எடிசன் இது குறித்து நெல்லை கமிஷ்னர் தீபக் எம்.தாமோதரிடம் புகார் கொடுத்தார். அவரது அறிவுரையின்படி நெல்லை குற்றப்பிரிவு உதவி கமிஷ்னர் ராஜூ, இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தி நிதி நிறுவனம் நடத்திய மயில்வாகனன் மற்றும் உடந்தையான அவரது தாய் உமா பார்வதி, உறவினர் சிவசுந்தர் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று மயில்வாகனனைப் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாகினர்.

 

cnc


இது குறித்துப் பல புகார்கள் வருகின்றன, விசாரணை நடத்துப்படுகிறது என்றார் மாநகர துணை கமிஷ்னர் சரவணன். நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பல போலீசார்களும் டெபாசிட் செய்துள்ளதாகவும் அவைகள் உறவினர்களின் பெயரில் டெபாசிட் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களின் காட்டில் ஐப்பசி அடைமழை தான்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.