Skip to main content

பட்டப்பகலில் நாங்குநேரியில் இரட்டைக் கொலை... தொடரும் பழிக்குப்பழி படுகொலைகள்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

incident in nanguneri... police investigation

 

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி நகரின் மருகால்குறிச்சியில் ஏற்பட்ட காதல் விவகாரம் காரணமாக ஒரு வருடங்களுக்குள்ளாக பழிக்குப் பழியாக இரண்டு தரப்பிலுமாக 5 பேர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நாங்குநேரியில், தொடர் சம்பவமாகியிருக்கிறது பழிக்குப் பழி படுகொலைகள்.

இன்று காலை மருகால்குறிச்சியின் சண்முகத்தாய் அருகிலுள்ள தனது உறவினரின் வீட்டிலிருக்க, அடுத்த வீட்டிலிருக்கும் சாந்தி அவருடைய வீட்டிலிருந்திருக்கிறார். காலை 12 மணியளவில் 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சாந்தியின் வீட்டுக்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு அரிவாளால் வெட்டி சாந்தியைப் படுகொலை செய்திருக்கிறது. இதில் சாந்தியின் தலை தொங்கியிருக்கிறது. அடுத்து அந்தக் கும்பல் வேறு ஒருவரைத் தேட, சம்பவமறிந்து பதறிப்போன சண்முகத்தாய் தன் வீட்டிலிருந்து தப்பிய போது அந்தக் கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசி வெட்டியதில் அவரின் தலை துண்டானது. பெண்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே சடலமானார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாங்குநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி உடல்களைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பியுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை எஸ்.பி.யான மணிவண்ணன் விசாரணையை மேற்கொண்டதோடு குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான தேடுதலைத் தீவிரப் படுத்தியிருக்கிறார்.

போலீசாரின் விசாரணையில், இந்தப் படுகொலைகள் பழிக்குப்பழியாக நடந்தவைகள். கடந்த 2019-ல் மருகால்குறிச்சியின் நம்பிராஜன் என்ற வாலிபர் அடுத்த தெருவிலிருக்கும் தனது சமூகத்தைச் சேர்ந்த வான்மதி என்பவரைக் காதலித்து அவருடன் நெல்லை டவுண் பகுதியில் அடைக்கலமாகியிருக்கிறார். இதில் பெண் வீட்டார் ஆத்திரத்தில் எதிர்த்தனர். மைனர் பெண்ணான வான்மதிக்கு இரண்டு மாதம் முடிந்து 18 வயதானதும், அவரைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வந்துள்ளார் நம்பிராஜன். இதனால் ஆத்திரமான வான்மதியின் சகோதரன் செல்லச்சாமியும் அவரது தரப்புகளும் 2019 நவம்பரில் நம்பிராஜனை கடத்திச்சென்று நெல்லை டவுண் பகுதியிலேயே படுகொலை செய்திருக்கிறது.

இதனால் நம்பிராஜனின் தந்தை அருணாசலத்தின் தரப்புகள் செல்லச்சாமியைப் பழிவாங்கக் காத்திருந்தது.

இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த செல்லச்சாமியைத் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்த அருணாச்சலம் தரப்புகள், கடந்த மார்ச் மாதம் அவர்கள் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்து வெட்டியதில் ஆறுமுகம், சுரேஷ் இருவர் பலியாக மற்றவர்கள் தப்பியிருக்கிறார்கள். இதில் பலியான சுரேஷ் என்ற வாலிபர் அந்த ஹோட்டலின் வேலையாள். ஆள் மாறாட்டம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

 

incident in nanguneri... police investigation


இதில் நம்பிராஜனின் தந்தை அருணாச்சலம், தாய் சண்முகத்தாய் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களனைவரும் அண்மையில் தான் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்கள். இவர்களைப் பழிக்குப் பழியாகப் போட்டுத்தள்ள முயற்சிப்பதையறிந்த உளவுப் பிரிவும், போலீசும் அவர்களை எச்சரித்ததோடு. இங்கே வரவேண்டாம் வேறு எங்கேயாவது போய்விடுங்கள். எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது. அதே சமயம் எஸ்.பி.யான மணிவண்ணனும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் தான் இதையும் மீறி இன்று காலை இரண்டு பெண்களையும் வெட்டி கொலை செய்திருக்கிறது அந்தக் கும்பல். விசாரணைப் போலீசார், இந்தப் படுகொலைகள் பழிக்குப்பழியாகத்தான் தெரிகிறது. 12 பேர்களடங்கிய கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றார்.

 

Ad

 

எச்சரிக்கைத் தகவலால் ஆண்கள் அலர்ட் ஆகித் தப்பிவிட ஹோட்டல் கொலையில் குற்றவாளியான சண்முகத்தாய் மற்றொரு குற்றவாளியான இசக்கியின் தாய் சாந்தி இருவரையும் குறிவைத்து அடித்திருக்கிறது. அதே சமயம் கும்பல் புகுந்த போது அருணாச்சலமும், அவர் மனைவி சண்முகத்தாயும் பின்புறமாகத் தப்பியதில் சண்முகத்தாய் சிக்கிக் கொள்ள நொடியில் அருணாச்சலம் தப்பியிருக்கிறார்.

உயிருக்கு உயிர், ரத்தத்திற்கு ரத்தம். ஃபார்மூலாக்கள் ஓய்வதில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.