Skip to main content

பட்டப்பகலில் நாங்குநேரியில் இரட்டைக் கொலை... தொடரும் பழிக்குப்பழி படுகொலைகள்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

incident in nanguneri... police investigation

 

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி நகரின் மருகால்குறிச்சியில் ஏற்பட்ட காதல் விவகாரம் காரணமாக ஒரு வருடங்களுக்குள்ளாக பழிக்குப் பழியாக இரண்டு தரப்பிலுமாக 5 பேர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நாங்குநேரியில், தொடர் சம்பவமாகியிருக்கிறது பழிக்குப் பழி படுகொலைகள்.

இன்று காலை மருகால்குறிச்சியின் சண்முகத்தாய் அருகிலுள்ள தனது உறவினரின் வீட்டிலிருக்க, அடுத்த வீட்டிலிருக்கும் சாந்தி அவருடைய வீட்டிலிருந்திருக்கிறார். காலை 12 மணியளவில் 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சாந்தியின் வீட்டுக்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு அரிவாளால் வெட்டி சாந்தியைப் படுகொலை செய்திருக்கிறது. இதில் சாந்தியின் தலை தொங்கியிருக்கிறது. அடுத்து அந்தக் கும்பல் வேறு ஒருவரைத் தேட, சம்பவமறிந்து பதறிப்போன சண்முகத்தாய் தன் வீட்டிலிருந்து தப்பிய போது அந்தக் கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசி வெட்டியதில் அவரின் தலை துண்டானது. பெண்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே சடலமானார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாங்குநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி உடல்களைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பியுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை எஸ்.பி.யான மணிவண்ணன் விசாரணையை மேற்கொண்டதோடு குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான தேடுதலைத் தீவிரப் படுத்தியிருக்கிறார்.

போலீசாரின் விசாரணையில், இந்தப் படுகொலைகள் பழிக்குப்பழியாக நடந்தவைகள். கடந்த 2019-ல் மருகால்குறிச்சியின் நம்பிராஜன் என்ற வாலிபர் அடுத்த தெருவிலிருக்கும் தனது சமூகத்தைச் சேர்ந்த வான்மதி என்பவரைக் காதலித்து அவருடன் நெல்லை டவுண் பகுதியில் அடைக்கலமாகியிருக்கிறார். இதில் பெண் வீட்டார் ஆத்திரத்தில் எதிர்த்தனர். மைனர் பெண்ணான வான்மதிக்கு இரண்டு மாதம் முடிந்து 18 வயதானதும், அவரைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வந்துள்ளார் நம்பிராஜன். இதனால் ஆத்திரமான வான்மதியின் சகோதரன் செல்லச்சாமியும் அவரது தரப்புகளும் 2019 நவம்பரில் நம்பிராஜனை கடத்திச்சென்று நெல்லை டவுண் பகுதியிலேயே படுகொலை செய்திருக்கிறது.

இதனால் நம்பிராஜனின் தந்தை அருணாசலத்தின் தரப்புகள் செல்லச்சாமியைப் பழிவாங்கக் காத்திருந்தது.

இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த செல்லச்சாமியைத் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்த அருணாச்சலம் தரப்புகள், கடந்த மார்ச் மாதம் அவர்கள் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்து வெட்டியதில் ஆறுமுகம், சுரேஷ் இருவர் பலியாக மற்றவர்கள் தப்பியிருக்கிறார்கள். இதில் பலியான சுரேஷ் என்ற வாலிபர் அந்த ஹோட்டலின் வேலையாள். ஆள் மாறாட்டம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

 

incident in nanguneri... police investigation


இதில் நம்பிராஜனின் தந்தை அருணாச்சலம், தாய் சண்முகத்தாய் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களனைவரும் அண்மையில் தான் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்கள். இவர்களைப் பழிக்குப் பழியாகப் போட்டுத்தள்ள முயற்சிப்பதையறிந்த உளவுப் பிரிவும், போலீசும் அவர்களை எச்சரித்ததோடு. இங்கே வரவேண்டாம் வேறு எங்கேயாவது போய்விடுங்கள். எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது. அதே சமயம் எஸ்.பி.யான மணிவண்ணனும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் தான் இதையும் மீறி இன்று காலை இரண்டு பெண்களையும் வெட்டி கொலை செய்திருக்கிறது அந்தக் கும்பல். விசாரணைப் போலீசார், இந்தப் படுகொலைகள் பழிக்குப்பழியாகத்தான் தெரிகிறது. 12 பேர்களடங்கிய கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றார்.

 

Ad

 

எச்சரிக்கைத் தகவலால் ஆண்கள் அலர்ட் ஆகித் தப்பிவிட ஹோட்டல் கொலையில் குற்றவாளியான சண்முகத்தாய் மற்றொரு குற்றவாளியான இசக்கியின் தாய் சாந்தி இருவரையும் குறிவைத்து அடித்திருக்கிறது. அதே சமயம் கும்பல் புகுந்த போது அருணாச்சலமும், அவர் மனைவி சண்முகத்தாயும் பின்புறமாகத் தப்பியதில் சண்முகத்தாய் சிக்கிக் கொள்ள நொடியில் அருணாச்சலம் தப்பியிருக்கிறார்.

உயிருக்கு உயிர், ரத்தத்திற்கு ரத்தம். ஃபார்மூலாக்கள் ஓய்வதில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.