Skip to main content

பி.இ முடித்து 11 ஆண்டுகளாக வேலையில்லை... நேர்த்திக் கடனாக உயிரைக் கொடுத்த அரசு வங்கி ஊழியா்!!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

INCIDENT IN NAGERKOIL

 

நாடு முமுவதும் படித்த வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை கோடிகளைக் கடந்து நிற்கின்றன. இதில் தனியாா் நிறுவனத்திலாவது வேலை ஒன்று கிடைத்துவிடாதா என்ற எண்ணத்தில் பலா் முயன்று வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இன்ஜினியாிங் படித்த ஒரு இளைஞா், 'எனக்கு வேலை கிடைத்தால், என் உயிரைக் குலதெய்வமான மாடசாமிக்குத் தருவேன்' என வேண்டுதல் கொடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.


நாகா்கோவில் அருகே எறும்புக்காடு பத்தன்கோடு பகுதியைச் சோ்ந்த செல்லசாமி மகன் நவீன் (32). என்ஜினியாிங் பட்டதாரியான இவா், பள்ளி கல்லூாியில் படிக்கும்போது அதிக மதிப்பெண் எடுத்து சக மாணவா்கள் மற்றும் ஆசிாியா்கள் மத்தியில் நல்ல மாணவனாக வலம் வந்துள்ளார். இதனால் தன்னுடைய எதிா்காலம் நன்றாக இருக்கும் எனக் கனவு கண்டுள்ளார் நவீன்.

இந்தநிலையில், இன்ஜினியாிங் முடித்து 11 ஆண்டுகளாகியும் வேலை கிடைக்காததால், கடந்த ஒரு வருடமாக நவீன் விரக்தியில் இருந்துள்ளார். அவர் நண்பா்கள் சிலர், 'உனக்கு வேலை கிடைத்தால், உன் குலசாமியான மாடசாமிக்குப் பொங்கல் இட்டு நேர்த்திக் கடன் செலுத்துவதாக' வேண்டிகொள் என ஆறுதல் கூறியுள்ளனர். ஆனால் நவீனோ, 'வேலை கிடைத்தால், என் உயிரைத் தருவேன்' என வேண்டிக் கொண்டாராம். இந்த விசயம் நவீனின் நண்பா்கள், பெற்றோா்கள் மற்றும் உறவினா்கள் யாருக்கும் தொியாதாம். இதற்கிடையில் நவீனுக்கு, மும்பையில் தேசிய மயமாக்கப்பட்ட அரசு வங்கியில் உதவி மேலாளா் வேலை கிடைத்தது. நவீனும் அங்கு சென்று பணியில் சோ்ந்து 8 நாட்கள் வேலை செய்தாராம்.

 

INCIDENT IN NAGERKOIL


இந்த நிலையில், 30 -ஆம் தேதி நாகா்கோவில் புத்தோி ரயில்வே பாலத்தில், ரயிலில் அடிபட்டு வாலிபா் ஒருவா் இறந்து கிடந்தாா். ரயில்வே போலீசாா் நடத்திய விசாரணையில், அவா் நவீன் எனத் தொியவந்தது. அவாின் சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில், 'எனக்கு வேலை கிடைத்தால் குலசாமி மாடசாமிக்கு என் உயிரை கொடுப்பேன் என்றேன் அதனால், அதை நிறைவேற்றும் விதமாக என் உயிரை கொடுத்திருக்கிறேன்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது

இச்சம்பவம், அவாின் பெற்றோா் மற்றும் குடும்பத்தினா் மட்டுமல்ல அக்கம் பக்கத்தினரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கையா?

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.